செவ்வாய், மே 31, 2011

மௌன சித்தர் பாடல்கள்


வகுளி நாதரென்னும் மௌன சித்தர் பாடல்கள் 
            
                                                குறவஞ்சிப்பா

ஆதிபெருஞ் சோதிதனை யனுதினமும் நாடி 
   ஐயர்பதந் தேடிகொண் டருள்பெறவே பாடிச் 
சோதிஎனும் மனோன்மணியா ளருதனைப் பெற்றுச் 
சுகருடைய பாதமதை மனந்தனிலே உற்று.

ஆங்காரந் தனயடக்கி யருள்நிலையை நோக்கி 
அரியபுவ னங்களெல்லாம் அறிய மனதாக்கி 
பாங்காகப் பெரியோர்கள் பாதமது பணிவோம் 
பத்தியொடு யோகநிட்டை நித்தியமும் புரிவோம் .

பேய்குணத்தைச் சுட்டல்லோ பிரமநிலை கண்டோம் 
பிரமபதி தான்கடந்து சுழிமுனையுள் கொண்டோம் 
நாய்போலே அலையாமல் நாமிருந்தோம் தவசில் 
நல்லதொரு ஆங்கார மடக்கிமிகப் பவுசாய் .

வஞ்சகமாம் வாழ்வைநம்பிச் சஞ்சலங்கள் அடையோம்
மகத்தான மகரிடிகள் பதங்காணச் சடையோம் 
பஞ்சமா பாதகரை ஓர்நாளும் பாரோம் 
பாவவினை பற்றருத்தோர் சிநேகிதங்கள் மறவோம் .

ஆயிரம்பேர் சித்தருடன் அனுதினமும் பாடி 
ஆனந்தத் திருநடனம் ஆடுவோமே கூடி   
தாயிஉமை மனோன்மணியா ளெனக்கு சொன்னசித்தைத் 
தானறிந்து நடந்து கொள்வோம் பெரியோரை அடுத்தே .

நிலையைக்கண்டு கொள்வதற்கு நினைந்துருகி வாடி 
நிர்மலமாம் ஐயன்பதம் தினந்தினமுந் தேடி 
கலையறிந்து வாசியையும் கட்டுடனே பிடித்தோம் 
கனல் எழுப்பி மூலமதைச் சுகமுடனே படித்தோம்.

ஊணுறக்கம் நீக்கியல்லோ யோகநிட்டை புரிந்தோம் 
உற்றாரை பற்றறுத்து மலைகுகையில் இருந்தோம் 
காணுதற்கும் எட்டாத பரவேளியைக் கண்டோம் 
கற்பமது உட்கொண்டு உடல்வளர்த்து கொண்டோம் 

தந்தைதாயார் சுற்றமொடு தளர்ந்துற வாடோம் 
தவநிலையைப் பெற்றுனராசெய் கையைத்தேடோம் 
விந்தையுடன் ஞானமதை மேன்பாடாய்த் தெரிந்தோம் 
மேலான பரவெளியி னருளதனை யறிந்தோம்.

நாசிநுனி வழியதனில் நாட்டமதைத் தெரிந்தோம் 
நல்லதொரு மூலவட்டச் சுழியை யறிந்தோம்.
வாசியேற்ற வகையறிந்து ஆசைகளை யறுப்போம் 
வையகத்தின் செய்கைதனை வழுவாமல் மறுப்போம்.

சக்திச்சக்ர பீடமேறிச் சுத்தவேளியைக் கண்டோம் 
சகலமும் பரவெளி என்றெண்ணி மனமதனில் கொண்டோம் 
சித்திபெற்ற முத்தர்களை எத்தினமும் அறிவோம் 
சீவகலை இன்னதென்று நாட்டமுடன் தெரிவோம்.

தொன்னூத்தறு தத்துவத்து உரைத்தனங்களைக் கொண்டோம் 
தய்யபர வெளிதனிலே அய்யர்பதங் கண்டோம் 
விண்ணுலகு இன்னதென்று அறிந்து கொண்டோம் யாமே 
மேலான பரவெளியின் ஒளிவைக் கண்டுதாமே 

நானென்ற ஆணவத்தை நயத்தறுத்து விடுத்தோம் 
நன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தோம் 
தானென்ற கருவமதைத் தணித்துவிட்டு வந்தோம் 
தவமேதான் கதியென்று சரவழியில் உகந்தோம் .

மௌன சித்தர் பாடல்கள் முற்றிட்டு                                    திருவடி முத்துகிருஷ்ணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக