வெள்ளி, மே 18, 2018

ஆன்மீக தகவல்கள்

திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவில் இருந்து ...
தன்னிடம் கேள்வி கேட்டவரிடம் வாரியார் சுவாமிகள் கூறிய விளக்கம் 

கடவுளைக் கண்ணால் காண முடியுமா....?'' என்று ஒருவர் கேள்வி கேட்க வாரியார் சுவாமிகள் "உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ....,
ஒரு கேள்வி, தம்பீ......!
இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா...?''
எனக்கென்ன கண் இல்லையா.......?
இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.'' ...!!
"தம்பீ......!
கண் இருந்தால் மட்டும் போதாது......!!
கண்ணில் ஒளியிருக்க வேண்டும்......!!
காது இருந்தால் மட்டும் போதுமா.....?
காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும்.....!!
அறிவு இருந்தால் மட்டும் போதாது.......!!
அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருக்க வேண்டும்...!!
உடம்பை நீ பார்க்கின்றாய்....!!
இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா....?''
"ஆம். நன்றாகத் தெரிகின்றது.''
"அப்பா...! அவசரப்படாதே.....!!
எல்லாம் தெரிகின்றதா....?''
"என்ன ஐயா....!
தெரிகின்றது..., தெரிகின்றது..., என்று எத்தனை முறை கூறுவது....?
எல்லாம்தான் தெரிகின்றது....?''
"அப்பா....!
எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா...?''
"ஆம்! தெரிகின்றன.''.....!!
"முழுவதும் தெரிகின்றதா...?''
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில்,
"முழுவதும் தெரிகின்றது'' என்றான்....!!
"தம்பீ...!
உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா....?''
மாணவன் விழித்தான்.
"ஐயா...! பின்புறம் தெரியவில்லை.'' "என்றான்.
தம்பீ...! முதலில் தெரிகின்றது.. தெரிகின்றது.. என்று பலமுறை சொன்னாய்....!!
இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே....!!
சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா...?''
"முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'...!!
நிதானித்துக் கூறு....!!.''
"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன்....!!
எல்லாம் தெரிகின்றது.'...!!'
"தம்பீ...! முன்புறத்தின் முக்கியமான, " முகம் தெரிகின்றதா".....?
மாணவன் துணுக்குற்றான்.
பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன்,
"ஐயனே...! முகம் தெரியவில்லை....!'' என்றான்.
"குழந்தாய்...!
இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை.....!!
முன்புறம் முகம் தெரியவில்லை......!!
நீ இந்த உடம்பில் சிறிது தான் கண்டிருக்கிறாய்.....!!
இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்....!!
அன்பனே...!
இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால்,
இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.'' ...!!
இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு,
இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல்,
ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''
ஒரு கண்ணாடி.....
திருவருள்....!!
மற்றொன்று....
குருவருள்.......!!
திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால்,
"ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்"....!!
"தம்பீ.....!
"திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும்"......,
அதனைக் "குருவருள் மூலமே பெறமுடியும்".....!!
" திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.''.....!!!
அந்த மனிதன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்.....!!

               சிவமேஜெயம் - திருவடிமுத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!




திங்கள், மே 07, 2018

ஆன்மீக சிந்தனைகள்

படித்ததில் பிடித்தது.... 


                 ஆன்மீக சிந்தனை



சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். 

அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். 

''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். 

சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். 

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது. 

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது. மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. 

‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை. 

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். 

இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். 

கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான். 

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். 

இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான். 

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது. 

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார். 

            என்னால் இங்காவது ஏதுமில்லை என்று அவனை சரணடைந்து இருந்தால் நம்மை அவன் வழிநடத்துவான் . நம் துன்பங்களை எல்லாம் பகலவன் கண்ட பணியென கரைத்து விடுவான் . ஆகவே எத்துணை துன்பம் நேரினும் சங்கரராமேஸ்வரனை மறவாமல் இருப்பதே நாம் கேட்கும் வரமாக இருக்க வேண்டும் .


             சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!!   சித்தர்களை போற்றுவோம் !!!