வெள்ளி, மே 27, 2011

தாயுமானவர் பாடல்கள் 1


1. திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்

[பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்] அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாந் தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந் தந்தெய்வம் எந்தெய்வமென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய் என்றைக்கு முள்ள தெதுஅது கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது கருத்திற் கிசைந்ததுவே கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங் கருதிஅஞ் சலிசெய்குவாம். 1. ஊரனந் தம்பெற்ற பேரனந் தஞ்சுற்றும் உறவனந் தம்வினையினால் உடலனந் தஞ்செயும் வினையனந் தங்கருத் தோஅனந் தம்பெற்றபேர் சீரனந் தஞ்சொர்க நரகமும் அனந்தநற் றெய்வமும் அனந்தபேதந் திகழ்கின்ற சமயமும் அனந்தமத னால்ஞான சிற்சத்தியா லுணர்ந்து காரனந் தங்கோடி வருஷித்த தென அன்பர் கண்ணும்விண் ணுந்தேக்கவே கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலைநங் கடவுளைத் துரியவடிவைப் பேரனந் தம்பேசி மறையனந் தஞ்சொலும் பெரியமெள னத்தின்வைப்பைப் பேசரும் அனந்தபத ஞான ஆ னந்தமாம் பெரியபொரு ளைப்பணிகுவாம். 2. அத்துவித வத்துவைச் சொப்ரகா சத்தனியை அருமறைகள் முரசறையவே அறிவினுக் கறிவாகி ஆனந்த மயமான ஆதியை அநாதியேக தத்துவ சொருபத்தை மதசம்ம தம்பெறாச் சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோமநிலையை நிர்தநிர் மலசகித நிஷ்ப்ரபஞ் சப்பொருளை நிர்விஷய சுத்தமான நிர்வி காரத்தைத் தடத்தமாய் நின்றொளிர் நிரஞ்சன நிராமயத்தைச் சித்தமறி யாதபடி சித்தத்தில் நின்றிலகு திவ்யதே சோமயத்தைச் சிற்பர வெளிக்குள்வளர் தற்பரம தானபர தேவதையை அஞ்சலிசெய்வாம். 3.

2. பரிபூரணானந்தம்

வாசா கயிங்கரிய மன்றியொரு சாதன மனோவாயு நிற்கும்வண்ணம் வாலாய மாகவும் பழகியறி யேன்துறவு மார்கத்தின் இச்சைபோல நேசானு சாரியாய் விவகரிப் பேன் அந்த நினைவையும் மறந்தபோது நித்திரைகொள் வேந்தேகம் நீங்குமென எண்ணிலோ நெஞ்சந் துடித்தயகுவேன் பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப் பேதைக்கும் வெகுதூரமே பேய்க்குண மறிந்திந்த நாய்க்குமொரு வழிபெரிய பேரின்ப நிட்டை அருள்வாய் பாசா டவிக்குளே செல்லாதவர்க்கருள் பழுத்தொழுகு தேவதருவே பார்குமண்ட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே. 1. தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன செயற்கொண் டிருப்பனமுதல் தேகங்க ளத்தனையும் மோகங்கொள் பெளதிகஞ் சென்மித்த ஆங்கிறக்கும் விரிவாய பூதங்கள் ஒன்றோடொன் றாயழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறுவெளி நிராலம்ப நிறைசூன்யம் உபசாந்த வேதவே தாந்தஞானம் பிரியாத பேரொளி பிறக்கின்ற வருள் அருட் பெற்றோர்கள் பெற்றபெருமை பிறவாமை யென்றைக்கும் இறவாமை யாய்வந்து பேசாமை யாகுமெனவே பரிவா யெனக்குநீ யறிவிக்க வந்ததே பரிபாக காலமலவோ பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே. 2. ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும் ஐயவொரு செயலுமில்லை அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர ராமென இருந்தபேரும் நேராக வொருகோபம் ஒருவேளை வரஅந்த நிறைவொன்று மில்லாமலே நெட்டுயிர்த் துத்தட் டழிந்துளறு வார்வசன நிர்வாக ரென்றபேரும் பூராய மாயோன்று பேசுமிட மோன்றைப் புலம்புவார் சிவராத்திரிப் போதுதுயி லோமெனற விரதியரும் அறிதுயில் போலேயிருந்து துயில்வார் பாராதி தனிலுள்ள செயலெலாம் முடிவிலே பார்க்கில்நின் செயலல்லவோ பார்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே. 3. அண்டபகி ரண்டமும் மாயா விகாரமே அம்மாயை யில்லாமையே யாமெனெவும் அறிவுமுண் டப்பாலும் அறிகின்ற அறிவினனை யறிந்துபார்க்கின் எண்டிசை விளக்குமொரு தெய்வஅரு ளல்லாமல் இல்லையெனு நினைவுஉண்டிங்(கு) யானென தறந்துரிய நிறைவாகி நிற்பதே இன்பமெனும் அன்பும்உண்டு கண்டன எலாம்அல்ல என்றுகண் டனைசெய்து கருவிகர ணங்களோயக் கண்மூடி யொருகண மிருக்கஎன் றாற்பாழ்த்த கர்மங்கள் போராடுதே பண்டையுள கர்மமே கர்த்தா வெனும்பெயர்ப் பக்ஷ்ம்நான் இச்சிப்பனோ பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே. 4. சந்ததமும் எனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மைநினை யன்றியில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த்த சமரச சுபாவமிதுவே இந்தநிலை தெளியநான் நெக்குருகிவாடிய இயற்கைதிரு வுளமறியுமே இன்நிலையி லேசற் றிருக்கஎன் றால்மடமை இதசத்ரு வாகவந்து சிந்தைகுடி கொள்ளுதே மலமாயை கன்மந் திரும்புமோ தொடுவழக்காய்ச் சென்மம்வரு மோஎனவும் யோசிக்கு தேமனது சிரத்தைஎனும் வாளும்உதவிப் பந்தமற மெய்ஞ்ஞானதீரமும் தந்தெனைப் பாதுகாத் தருள்செய்குவாய் பார்க்குமிட மெங்குமொருநீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே. 5. பூதலய மாகின்ற மாயைமுத லென்பர்சிலர் பொறிபுலன் அடங்குமிடமே பொருளென்பர் சிலர்கரண முடிவென்பர் சிலர்குணம் போனஇட மென்பர்சிலபேர் நாதவடி வென்பர்சிலர் விந்துமய மென்பர்சிலர் நட்டநடு வேயிருந்த நாமென்பர் சிலர்ருவுஉருவ மாமென்பர் சிலர்கருதி நாடில்அரு வென்பர்சிலபேர் பேதமற வுயிர்கெட்ட நிலையமென் றிடுவர்சிலர் பேசில்அரு ளென்பர்சிலபேர் பின்னும்முன் னுங்கெட்டசூனியம தென்பர்சிலர் பிறவுமே மொழிவர்இவையால் பாதரச மாய்மனது சஞ்சலப் ப்டுமலால் பரமசுக நிட்டை பெறுமோ பார்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே.6 . அந்தகா ரத்தையோர் அகமாக்கி மின்போல்என் அறிவைச் சுருக்கினவரார் அவ்வறிவு தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவுந் தலைமீதிலே சொந்தமா யெழுதப் படித்தார் மெய்ஞ்ஞான சுகநிட்டை சேராமலே சோற்றுத் துருத்தியைச் சதமெனவும் உண்டுண்டு தூங்கவைத் தவரார்கொலொ தந்தைதாய் முதலான அகிலப்ர பஞ்சந் தனைத்தந்த தெனதாசையோ தன்னையே நோவனொ பிறரையே நோவனோ தற்கால மதைநோவனோ பந்தமா னதுதந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதுமறியேன் பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே.7 . வாரா தெலாமொழிய வருவன வெலாமெய்த மனதுசாட் சியதாகவே மருவநிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபுசம ரசமாகவே பூராய மாயுணர வூகமது தந்ததும் பொய்யுடலை நிலையன்றெனப் போதநெறி தந்த்துஞ் சாசுவத ஆனந்த போகமே வீடென்னவே நீராள மாயுருக வுள்ளன்பு தந்ததும் நின்னதருள் இன்னும் இன்னும் நின்னையே துணையென்ற என்னையே காக்கவொரு நினைவுசற் றுண்டாகிலோ பாராதி யறியாத மோனமே யிடைவிடாப் பற்றாக நிற்கஅருள்வாய் பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற ந்றைகின்ற ப்ரிபூர ணானந்தமே.8 . ஆழாழி கரையின்றி நிற்கவிலை யோகொடிய ஆலம்அமு தாகவிலையோ அக்கடலின் மீதுவட அனல்நிற்க வில்லையோ அந்தரத் தகி¢லகோடி தாழாமல் நிலைநிற்க வில்யோ மேருவுந் தனுவாக வளையவிலயோ சத்தமே கங்களும் வச்ரதர னாணையில் சஞ்சரித் திடவில்லையோ வாழாது வாழவே இராமனடி யாற்சிலையும் மடமங்கை யாகவிலையோ மணிமந்த்ர மாதியால் வேண்டுசித் திகள்உலக மார்கத்தில் வைக்கவிலையோ பாழான என்மனங் குவியஒரு தந்திரம் பண்ணுவ துனக்கருமையோ பார்க்குமிட மெங்குமொரு நீக்கமறநிறைகின்ற பரிபூர ணானந்தமே. 9 . ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி ஆளினுங் கடல்மீதிலே ஆனைசெல வேநினைவர் அளகேசன் நிகராக அம்பொன்மிக வைத்தபேரும் நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் நெடுநா ளிருந்தபேரும் நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி நெஞ்சுபுண் ணாவர்எல்லாம் யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும் உறங்குவது மாகமுடியும் உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே ஒன்றைவிட் டொன்றுபற்றிப் பாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூர ணானந்தமே.10 .

3. பொருள் வணக்கம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய் நிறைவாய் நீங்காச் சுத்தமுமய் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை சுடராய் எல்லாம் வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி மனவாக் கெட்டாச் சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச் சிந்தை செய்வாம்.1 . யாதுமன நினையுமந்த நினைவுக்கு நினைவாகி யாதநின் பாலும் பேதமற நின்றுயிக் குராகி அன்பருக்கே பேரா னந்தக் கோதிலமு தூற்றரும்பிக் குணங்குறியொன் றறத்தன்னைக் கொடுத்துக் காட்டுந் தீதில்பரா பரமான சித்தாந்தப் பேரொளியைச் சிந்தை செய்வாம். 2 . பெருவெளியாய் ஐம்பூதம் பிறப்பிடமாய்ப் பேசாத பெரிய மோனம் வருமிடமாய் மனமாதிக் கெட்டாத பேரின்ப மயமாய் ஞானக் குருவருளாற் காட்டிடவும் அன்பரைக்கோத் தறவிழுங்கிக் கொண்டப் பாலுந் தெரிவரிதாய்க் கலந்தெந்தப் பொருள் அந்தப் பொருளினையாஞ் சிந்தை செய்வாம் .3. இகபரமும் உயிர்க்குயிரை யானெனதற் றவர்உறவை எந்த நாளுஞ் சுகபரிபூ ரணமான நிராலம்ப கோசரத்தைத் துரிய வாழ்வை அகமகிழ வருந்தேனை முக்கனியைக் கற்கண்டை அமிர்தை நாடி மொகுமொகென இருவிழிநீர் முந்திறைப்பக் கரமலர்கள் முகிழ்த்து நிற்பாம். 4. சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி அருவுருவத் தன்மை நாமம் ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின் றியக்கஞ் செய்யும் சோதியைமாத் தூவெளியை மனதவிழ நிறைவான துறிய வாழ்வைத் தீதில்பர மாம்பொருளைத் திருவருளை நினைவாகச் சிந்தை செய்வாம். 5 . இந்திரசா லங்கனவு கானலின்நீ ரெனவுலகம் எமக்குத் தோன்றச் சந்ததமுஞ் சிற்பரத்தா லழியாத தற்பரத்தைச் சார்ந்து வாழ்க புந்திமகி ழுறநாளுந் தடையறவா னந்தவெள்ளம் பொலிக என்றே வந்தருளுங் குருமெளனி மலர்த்தாளை அநுதினமும் வழுத்தல் செய்வாம். 6 பொருளாகக் கண்டபொரு ளெவைக்கும்முதற் பொருளாகிப் போத மாகித் தெருளாகிக் கருதுமன்பர் மிடிதீரப் பருகவந்த செழந்தே னாகி அருளானோர்க் ககம்புறமென் றுன்னாத பூரணஆ னந்த மாகி இருள்தீர விளங்குபொரு ளியாதந்தப் பொருளினையாம் இறைஞ்சி நிற்பாம் .7 . . அருமறையின் சிரப்பொருளாய் விண்ணவர்மா முனிவர்சித்த ராதி யானோர் ¦திரிவரிய பூரணமாய்க் காரணங்கற் பனைகடந்த செல்வ மாகிக் கருதரிய மலரின்மணம் எள்ளிலெண்ணைய் உடலலுயிர்போற் கலந்தெந் நாளும் துரியநடு வூடிருந்த பெரியபொருள் யாததனைத் தொழுதல் செய்வாம். 8 . விண்ணாதி பூதமெல்லாந் தன்னகத்தி லடக்கிவெறு வெளியாய் ஞானக் கண்ணாரக் கண்டஅன்பர் கண்ணூடே ஆனந்தக் கடலாய் வேறொன் றெண்ணாத படிக்கிரங்கித் தானாகச் செய்தருளும் இறையே உன்றன் தண்ணாருஞ் சாந்தஅருள் தனைநினைந்து கரமலர்கள் தலைமேற் கொள்வாம். 9 . விண்ணிறைந்த வெளியாய்என் மனவெளியிற் கலந்தறிவாம் வெளியி னூடுந் தண்ணிறைந்த பேரமுதாய்ச் சதானந்த மானபெருந் தகையே நின்பால் உண்ணிறைந்த பேரன்பா லுள்ளுருகி மொழிகுழறி உவகை யாகிக் கண்ணிறைந்த புனலுகுப்பக் கரமுகிழ்ப்ப நின்னருளைக் கருத்தில் வைப்பாம். 10 . வேறு ஆதியந்தங் காட்டாத முதலா யெம்மை அடியைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல நீதிபெறுங் குருவாகி மனவாக் கெட்டா நிச்சயமாய்ச் சொச்சமதாய் நிமல மாகி வாதமிடுஞ் சமயநெறிக் கரிய தாகி மெளனத்தோர் பால்வெளியாய் வயங்கா நின்ற சோதியைஎன் னுயிர்த்துணையை நாடிக் கண்ணீர் சொரியஇரு கரங்குவித்துத் தொழுதல் செய்வாம். 1 . அகரவுயி ரெழுத்தனைத்து மாகி வேறாய் அமர்ந்தென அகிலாண்டம் அனைத்துமாகிப் பகர்வனஎல் லாமாகி அல்ல தாகிப் பரமாகிச் சொல்லரிய பான்மை யாகித் துகளறுசங் கற்பகவிற் பங்களெல்லாந் தோயாத அறிவாகிச் சுத்த மாகி நிகரில்பசு பதியான பொருளை நாடி கெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம். 2

4. சின்மயானந்தகுரு

பன்னிருசீர்க்கழ ¢ நெடிலடி யாசிரிய விருத்தம் அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப அன்பினா லுருகிவிழிநீர் ஆறாக வாராத முத்தியின தாவேச ஆசைக் கடற்குள் மூழ்கிச் சங்கர சுயம்புவே சம்புவே எனவுமொழி தழுதழுத் திடவணங்குஞ் சன்மார்க்க நெறியிலாத் துன்மர்க்க னேனையுந் தண்ணருள் கொடுத்தாள்வையோ துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிவோர்கள் தொழுதருகில் வீற்றிருப்பச் சொல்லரிய நெறியைஒரு சொல்லா லுணர்த்தியே சொரூபாநு பூதிகாட்டிச் செங்கமல பீடமேற் கல்லா லடிக்குள்வளர் சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே.1 . ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவிநான் அத்துவித வாஞ்சையாதல் அரியகொம் பில்தேனை முடவனிச் சித்தபடி ஆகும்அறி வலிழஇன்பந் தாக்கும்வகை யேதிநாட் சரியைகிரி யாயோக சாதனம் விடித்ததெல்லாஞ் சன்மார்க மல்லஇவை நிற்கஎன் மார்கங்கள் சாராத பேரறிவதாய் வாக்குமனம் அணுகாத பூரணப் பொருள்வந்து வாய்க்கும் படிக்குபாயாம் வருவித் துவட்டாத பேரின்ப மானசுக வாரியினை வாய்மடுத்துத் தேக்கித் திளைக்கநீ முன்னிற்ப தென்றுகாண் சித்தாந்த முத்திமுத்லே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே. 2 . ஔவிய மிருக்கநா னென்கின்ற ஆணவம் அடைந்திட் டிருக்கலோபம் அருளின்மை கூடக் கலந்துள் ளிருக்கமேல் ஆசா பிசாபமுதலாம் வெவ்விய குணம்பல இருக்கஎன் னறிவூடு மெய்யன்நீ வீற்றிருக்க விதியில்லை என்னிலோ பூரண னெனும்பெயர் விரிக்கிலுரை வேறுமுளதோ கவ்வுமல மாகின்ற நாகபா சத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிதகல வலியவரு ஞானசஞ் சீவியே கதியான பூமிநடுவுட் செவ்விதின் வளர்ந்தோங்கு திவ்யகுண மேருவே சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே. 3 . ஐவகை எனும்பூத மாதியை வகுத்ததனுள் அசரசர பேதமான யாவைவும் வகுத்துநல் லறிவையும் வகுத்துமறை யாதிநூ லையும்வகுத்துச் சைவமுத லாம் அளவில் சமயமும் வகுத்துமேற் சமயங் கடந்தமோன சமரசம் வகுத்தநீ யுன்னையான் அணுகவுந் தண்ணருள் வகுக்க இலையோ பொய்வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய்யிலா மெய்யரறிவில் போதபரி பூரண அகண்டிதா காரமாய்ப் போக்குவர வற்றபொருளே தெய்வமறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே. 4 . ஐந்துவகை யாகின்ற பூதபே தத்தினால் ஆகின்ற ஆக்கைநீர்மேல் அமர்கின்ற குமிழியென நிற்கின்ற தென்னநான் அறியாத காலமெல்லாம் புந்திமகி ழுறவுண் டுடுத்தின்ப மாவதே போந்தநெறி என்றிருன்ந்தேன் பூராய மாகநின தருள்வந் துணர்த்த இவை போனவழி தெரியவில்லை எந்தநிலை பேசினும் இணங்கவிலை யல்லால் இறப்பொடு பிறப்பையுள்ளே எண்ணினால் நெஞ்சது பகீரெனுந் துயிலுறா திருவிழியும் இரவுபகலாய்ச் செந்தழலின் மெழுகான தங்கம் இவை என்கொலோ சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே. 5. காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப்போற் கட்டுண் டிருந்தஎமை வெளியில்விட் டல்லலாங் காப்பிட் டதற்கிசைந்த பேரிட்டு மெய்யென்று பேசுபாழ்ம் பொய்யுடல் பெலக்கவிளை யமுதமூட்டிப் பெரியபுவ னத்தினிடை போக்குவர வுறுகின்ற பெரியவிளை யாட்டமைத்திட் டேரிட்ட தன்சுருதி மொழிதப்பில் நமனைவிட் டிடருற உறுக்கி இடர்தீர்த் திரவுபக லில்லாத பேரின்ப வீட்டினில் இசைந்துதுயில் கொண்மின்என்று சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே. 6. கருமருவு குகையனைய காயத்தின் நடுவுள் களிம்புதோய் செம்பனையயான் காண்டக இருக்கநீ ஞான அனல் மூட்டியே கனிவுபெற உள்ளுருக்கிப் பருவம தறிந்துநின் னருளான குளிகைகொடு பரிசித்து வேதிசெய்து பத்துமாற் றுத்தஙக மாக்கியே பணிகொண்ட பஷத்தை என்சொல்லுகேன் அருமைபெறு புகழ்பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தமீதும் அத்துவித நிலையராய் என்னையாண் டுன்னடிமை யான வர்க ளறிவினூடுந் திருமருவு கல்லா லடிக்கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே. 7. கூடுத லுடன்பிரித லற்றுநிர்த் தொந்தமாய்க் குவிதலுடன் விரிதலற்றுக் குணமற்று வரவினொடு போக்கற்று நிலையான குறியற்று மலமுமற்று நாடுதலு மற்றுமேல் கீழ்நடுப் பக்கமென நண்ணுதலு மற்றுவிந்து நாதமற் றைவகைப் பூதபே தமுமற்று ஞாதுருவின் ஞானமற்று வாடுதலு மற்றுமேல் ஒன்றற் றிறண்டற்று வாக்கற்று மனமுமற்று மன்னுபரி பூரணச் சுகவாரி தன்னிலே வாய்மடுத் துண்டவசமாய்த் தேடுதலு மற்றவிட நிலையென்ற மெளனியே சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே. 8. தாராத அருளெலாந் தந்தருள மெளனியாய்த் தாயனைய கருணைகாட்டித் தாளிணையென் முடிசூட்டி அறிவிற் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்திநிலை ஒன்றோ டிரண்டெனாமல் ஒளியெனவும் வெளியெனவும் உருவெனவும் நாதமாம் ஒலியெனவும் உணர்வறாமல் பாராது பார்ப்பதே ஏதுசா தனமற்ற பரமஅநு பூதிவாய்க்கும் பண்பென் றுணர்த்தியது பாராம லந்நிலை பதிந்தநின் பழவடியாதஞ் சீரா யிருக்கநின தருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே. 9. போதமாய் ஆதிநடு அந்தமும் இலாததாய்ப் புனிதமாய் அவிகாரமாய்ப் போக்குவர வில்லாத இன்பமாய் நின்றநின் பூரணம் புகலிடமதா ஆதரவு வையாமல் அறிவினை மறைப்பதுநின் அருள்பின்னும் அறிவின்மைதீர்த் தறிவித்து நிற்பதுநின் அருளாகில் எளியனேற் கறிவாவ தேதறிவிலா ஏதம்வரு வகையேது வினையேது வினைதனக் கீடான காயமேதென் இச்சா சுதந்தரஞ் சிறிதுமிலை இகபரம் இரண்டினுள் மலைவுதீரத் தீதிலருள் கொண்டினி யுணர்த்தியெனை யாள்வையோ சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே. 10. பத்திநெறி நிலைநின்றும் நவகண்ட பூமிப் பரப்பைவல மாகவந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசிதாக மின்றியெழுநா மத்தியிடை நின்றும்உதிர் சருகுபுனல் வாயுவினை வன்பசி தனக்கடைத்து மெனத் திருந்தும்உயர் மலைநுழைவு புக்கியும் மன்னுதச நாடிமுற்றுஞ் சுத்திசெய் தும்மூல ப்ராணனோ டங்கியைச் சோமவட் டத்தடைத்துஞ் சொல்லரிய அமுதுண்டும் அற்பவுடல் கற்பங்கள் தோறும்நிலை நிற்கவீறு சித்திசெய் துஞ்ஞான மலதுகதி கூடுமோ சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே சின்மயா னந்தகுருவே. 11.

5. மெளனகுரு வணக்கம்

ஆசைநிக ளத்தினை நிர்த்தூளி படவுதறி ஆங்கார முளையைஎற்றி அத்துவித மதமாகி மதம்ஆறும் ஆறாக அங்கையின் விலாழியாக்கிப் பாசஇருள் தன்னிழ லெனச்சுளித் தார்த்துமேல் பார்த்துப் பரந்தமனதைப் பாரித்த கவளமாய்ப் பூரிக்க வுண்டுமுக படாமன்ன மாயைநூறித் தேசுபெற நீவைத்த சின்முத்தி ராங்குசச் செங்கைக் குளேயடக்கிச் சின்மயா னந்தசுக வெள்ளம் படிந்துநின் திருவருட் பூர்த்தியான வாசமுறு சற்சார மீதென்னை யொருஞான மத்தகச மெனவளர்த்தாய் மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் மரபில்வரு மெளன குருவே. 1. ஐந்துவகை யாகின்ற பூதமுதல் நாதமும் அடங்கவெளி யாகவெளிசெய் தறியாமை யறிவாதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்றநிலையில் சிந்தையற நில்லென்று சும்மா இருத்திமேல் சின்மயா னந்தவெள்ளந் தேக்கித் திளைத்துநான் அதுவா யிருக்கநீ செய்சித்ர மிகநன்றுகாண் எந்தைவட வாற்பரம குருவாழ்க வாழஅரு ளியநந்தி மரபுவாழ்க என்றடியர் மனமகிழ வேதாக மத்துணி பிரண்டில்லை யொன்றென்னவே வந்தகுரு வேவீறு சிவஞான சித்திநெறி மெளனோப தேசகுருவே மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் மரபில்வரு மெளன குருவே. 2. ஆதிக்க நல்கினவ ராரிந்த மாயைக்கென் அறிவன்றி யிடமில்லையோ அந்தரப் புட்பமுங் கானலின் நீருமோர் அவசரத் துபயோகமோ போதித்த நிலையையும் மயக்குதே அபயம்நான் புக்கஅருள் தோற்றிடாமல் பொய்யான வுலகத்தை மெய்யா நிறுத்தியென் புந்திக்குள் இந்த்ரசாலஞ் சாதிக்கு தேயிதனை வெல்லவும் உபாயம்நீ தந்தருள்வ தென்றுபுகல்வாய் சண்மத ஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரசநிர் வாகநிலையும் மாதிக்கொ டண்டப் பரப்பெலாம் அறியவே வந்தருளு ஞானகுருவே மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் மரபில்வரு மெளன குருவே. 3. மின்னனைய பொய்யுடலை நிலையென்றும் மையிலகு விழிகொண்டு மையல்பூட்டும் மின்னார்க ளின்பமே மெய்யெம்றும் வளர்மாட மேல்வீடு சொர்க்கமென்றும் பொன்னையழி யாதுவளர் பொருளென்று போற்றிஇப் பொய்வேட மிகுதிகாட்டிப் பொறையறிவு துறவீதல் ஆதிநற் குணமெலாம் போக்கிலே போகவிட்டுத் தன்னிகரி லோபாதி பாழ்ம்பேய் பிடித்திடத் தரணிமிசை லோகாயதன் சமயநடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி மன்னவொரு சொற்கொண் டெனைத்தடுத் தாண்டன்பின் வாழ்வித்த ஞானகுருவே மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் மரபில்வரு மெளன குருவே. 4. போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற் கிருக்குமதுபோல் புருடர்பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலுமதி னாலாம்பயன் ஞானநெறி முக்யநெறி காட்சியனு மானமுதல் நானாவி தங்கள் தேர்ந்து நான்நான் எனக்குளறு படைபுடை பெயர்ந்திடவும் நான்குசா தனமும்ஓர்ந்திட் டானநெறி யாஞ்சரியை யாதிசோ பானமுற் றணுபஷ சம்புபஷம் ஆமிரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்திரண் டொன்றென்னுமோர் மானத விகற்பமற வென்றுநிர் பதுநமது மரபென்ற பரமகுருவே மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் மரபில்வரு மெளன குருவே. 5. கல்லாத அறிவுமேற் கேளாத கேளாத கேள்வியுங் கருணைசிறி தேதுமில்லாக் காட்சியும் கொலைகளவு கட்காமம் மாட்சியாக் காதலித் திடுநெஞ்சமும் பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்துகுணம் ஏதும்அறியேன் புருடர்வடி வானதே யல்லாது கனவிலும் புருடார்த்தம் ஏதுமில்லேன் எல்லா மறிந்தநீ யறியாத தன்றெனக் கெவ்வண்ணம் உய்வண்ணமோ இருளையிரு ளென்றவ்ர்க் கொளிதா ரகம்பெறும் எனக்குநின் னருள்தாரகம் வல்லா னெனும்பெய ருனக்குள்ள தேயிந்த வஞ்சகனை யாளநினையாய் மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் மரபில்வரு மெளன குருவே. 6. கானகம் இலங்குபுலி பசுவொடு குலாவும்நின் கண்காண மதயானைநீ கைகாட்ட வுங்கையால் நெகிடிக் கெனப்பெரிய கட்டைமிக ஏந்திவருமே போனகம் அமைந்ததென அக்காம தேனுநின் பொன்னடியில் நின்றுசொலுமே புவிராசர் கவிராசர் தவராச ரென்றுனைப் போற்றிசய போற்றிஎன்பார் ஞானகரு ணாகர முகங்கண்ட போதிலே நவநாத சித்தர்களும்உன் நட்பினை விரும்புவார் சுகர்வாம தேவர்முதல் ஞானிகளும் உனைமெச்சுவார் வானகமும் மண்ணகமும் வந்தெதிர் வணங்கிடும்உன் மகிமையது சொல்லஎளிதோ மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் மரபில்வரு மெளன குருவே. 7. சருகுசல பட்சணிக ளருகோடி யல்லால் சகோரபட் சிகள்போலவே தவளநில வொழுகமிர்த தாரையுண் டழியாத தன்மைய ரனந்தகோடி இருவினைக ளற்றிரவு பகலென்ப தறியாத ஏகாந்த மோனஞான இன்பநிட் டையர்கோடி மணிமந்த்ர சித்திநிலை எய்தினர்கள் கோடிசூழக் குருமணி யிழைத்திட்ட சிங்கா தனத்தின்மிசை கொலுவீற் றிருக்கும்நின்னை கும்பிட் டனந்தமுறை தெண்டனிட் டென்மனக் குறையெலாந் தீரும்வண்ணம் மதுமல ரெடுத்துனிரு தாளையர்ச் கிக்கவெனை வாவென் றழைப்பதெந்நாள் மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் மரபில்வரு மெளன குருவே. 8. ஆங்கார மானகுல வேடவெம் பேய்பாழ்த்த ஆணவத் தினும்வலிதுகாண் அறிவினை மயக்கிடும் நடுவறிய வொட்டாது யாதொன்று தொடினும் அதுவாய்த் தாங்காது மொழிபேசும் அரிகரப் பிரமாதி தம்மொடு சமானமென்னுந் தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே தன்னிலசை யாதுநிற்கும் ஈங்காரெ னக்குநிகர் என்னப்ர தாபித் திராவணா காரமாகி இதயவெளி யெங்கணுந் தன்னரசு நாடுசெய் திருக்கும்இத னொடெந்நேரமும் வாங்காநி லாஅடிமை போராட முடியுமோ மெளனோப தேசகுருவே மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் மரபில்வரு மெளன குருவே. 9. பற்றுவெகு விதமாகி யொன்றைவிட் டொன்றனைப் பற்றியுழல் கிருமிபோலப் பாழ்ஞ்சிந்தை பெற்றநான் வெளியாக நின்னருள் பகர்ந்துமறி யேன்துவிதமோ சிற்றறிவ தன்றியும் எவரேனும் ஒருமொழி திடுக்கென் றுரைத்தபோது சிந்தைசெவி யாகவே பறையறைய வுதரவெந் தீநெஞ்சம் அளவளாவ உற்றுணர உண்ர்வற்றுன் மத்தவெறி யினர்போல உளறுவேன் முத்திமார்க்கம் உணர்வதெப் படியின்ப துன்பஞ் சமானமாய் உறுவதெப் படியாயினும் மற்றெனக் கையநீ சொன்னவொரு வார்த்தையினை மலையிலக் கெனநம்பினேன் மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் மரபில்வரு மெளன குருவே. 10.

6. கருணாகரக்கடவுள்

நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விடய கைவல்யமா நிட்கள அசங்கசஞ் சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்தமுக்த தற்பரவித் வாதீத வ்யோமபரி பூரண சதானந்த ஞானபகவ சம்புசிவ சங்கர சர்வேச என்றுநான் சர்வகா லமும்நினைவனோ அற்புத அகோசர நிவிர்த்திபெறும் அன்பருக் கானந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூபசாட் சாத்கார அநுபூதி யநுசூதமுங் கற்பனை யறக்காண முக்கணுடன் வடநிழற் கண்ணூ டிருந்தகுருவே கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு கருணா கரக்கடவுளே. 1. மண்ணாதி ஐந்தொடு புறத்திலுள கருவியும் வாக்காதி சுரோத்ராதியும் வளர்கின்ற சப்தாதி மனமாதி கலையாதி மன்னுசுத் தாதியுடனே தொண்ணூற்றொ டாறுமற் றுள்ளனவும் மெளனியாய்ச் சொன்னவொரு சொற்கொண்டதே தூவெளிய தாயகண் டானந்த சுகவாரி தோற்றுமதை என்சொல்லுவேன் பண்ணாரும் இசையினொடு பாடிப் படித்தருட் பான்மைநெறி நின்றுதவறாப் பக்குவ விசேடராய் நெக்குநெக் குருகிப் பணிந்தெழுந் திருகைகூப்பிக் கண்ணாறு கரைபுரள நின்றஅன் பரையெலாங் கைவிடாக் காட்சியுறவே கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு கருணா கரக்கடவுளே. 2. எல்லாமுன் அடிமையே எல்லாமுன் உடைமையே எல்லாமுன் னுடையசெயலே எங்கணும் வியாபிநீ என்றுசொலு மியல்பென் றிருக்காதி வேதமெல்லாஞ் சொல்லான் முழக்கியது மிக்கவுப காரமாச் சொல்லிறந் தவரும்விண்டு சொன்னவையு மிவைநல்ல குருவான பேருந் தொகுத்தநெறி தானுமிவையே அல்லாம லில்லையென நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்றுசுகநான் ஆகாத வண்ணமே இவ்வண்ண மாயினேன் அதுவுநின தருளென்னவே கல்லாத அறிஞனுக் குள்ளே யுணர்த்தினை கதிக்குவகை யேதுபுகலாய் கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு கருணா கரக்கடவுளே. 3. பட்டப் பகற்பொழுதை இருளென்ற மருளர்தம் பட்சமோ எனதுபட்சம் பார்த்தவிட மெங்கணுங் கோத்தநிலை குலையாது பரமவெளி யாகவொருசொல் திட்டமுடன் மெளனியா யருள்செய் திருக்கவுஞ் சேராமல் ஆராகநான் சிறுவீடு கட்டியதின் அடுசோற்றை யுண்டுண்டு தேக்குசிறி யார்கள்போல நட்டனைய தாக்கற்ற கல்வியும் விவேகமும் நன்னிலய மாகவுன்னி நானென்று நீயென் றிரண்டில்லை யென்னவே நடுவே முளைத்தமனதைக் கட்டஅறி யாமலே வாடினே னெப்போது கருணைக் குரித்தாவனோ கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு கருணா கரக்கடவுளே. 4. மெய்விடா நாவுள்ள மெய்யரு ளிருந்துநீ மெய்யான மெய்யைஎல்லாம் மெய்யென வுணர்த்தியது மெய்யிதற் கையமிலை மெய்யேதும் அறியாவெறும் பொய்விடாப் பொய்யினேன் உள்ளத் திருந்துதான் பொய்யான பொய்யைஎல்லாம் பொய்யெனா வண்ணமே புகலமைத் தாயெனில் புன்மையேன் என்செய்குவேன் மைவிடா செழுநீல கண்டகுரு வேவிட்ணு வடிவான ஞானகுருவே மலர்மேவி மறையோது நான்முகக் குருவே மதங்கள்தொறும் நின்றகுருவே கைவிடா தேயென்ற அன்பருக் கன்பாய்க் கருத்தூ டுணர்த்துகுருவே கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு கருணா கரக்கடவுளே. 5. பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே பாவித் திறைஞ்சஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்திஅப் பனிமல ரெடுக்கமனமும் நண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கஎனில் நாணும்என் னுளம்நிற்றிநீ நான்கும்பி டும்டோ தரைக்கும்பி டாதலால் நான்பூசை செய்யல் முறையோ விண்ணேவி ணாதியாம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தேஅ வித்தின் முளையே கண்ணே கருத்தேஎன் எண்ணே எழுத்தே கதிக்கான மோனவடிவே கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு கருணா கரக்கடவுளே. 6. சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றினது தான்வந்து முற்றுமெனலால் சகமீ திருந்தாலும் மரணமுண் டென்பது சதாநிட்டர் நினைவதில்லை சிந்தையறி யார்க்கீது டோதிப்ப தல்லவே செப்பினும் வெகுதர்க்கமாம் திவ்யகுண மார்க்கண்டர் சுகராதி முனிவோர்கள் சித்தாந்த நித்யரலரோ இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்காதி வேதமுனிவர் எண்ணரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இ¢ரவிமதி யாதியோர்கள் கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவருங் கைகுவித் திடுதெய்வமே கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு கருணா கரக்கடவுளே. 7. துள்ளுமறி யாமனது பலிகொடுத் தேன்கர்ம துட்டதே வதைகளில்லை துரியநிறை சாந்ததே வதையாம் உனக்கே தொழும்பன்அன் பபிடேகநீர் உள்ளுறையி லென்னாவி நைவேத்தி யம்ப்ராணன் ஓங்குமதி தூபதீபம் ஒருசால மன்றிது சதாகால பூசையா ஒப்புவித் தேன்கருணைகூர் தெள்ளிமறை வடியிட்ட அமுதப் பிழம்பே தெளிந்ததே னேசீனியே திவ்யரச மியாவுந் திரண்டொழுகு பாகே தெவிட்டாத ஆனந்தமே கள்ளன் அறி வூடுமே மெள்ளமெள வெளியாய்க் கலக்கவரு நல்லஉறவே கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு கருணா கரக்கடவுளே. 8. உடல்குழைய என்பெலாம் நெக்குருக விழிநீர்கள் ஊற்றென வெதும்பியூற்ற ஊசிகாந் தத்தினைக் கண்டணுகல் போலவே ஓருறவும் உன்னியுன்னிப் படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குறப் பாடியா டிக்குதித்துப் பனிமதி முகத்திலே நிலவனைய புன்னகை பரப்பியார்த் தார்த்தெழுந்து மடலவிழு மலரனைய கைவிரித் துக்கூப்பி வானேயவ் வானிலின்ப மழையே மழைத்தாரை வெள்ளமே நீடூழி வாழியென வாழ்த்தியேத்துங் கடல்மடை திறந்தனைய அன்பரன் புக்கெளியை கன்னெஞ்ச னுக்கெளியையோ கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு கருணா கரக்கடவுளே. 9. இங்கற்ற படியங்கு மெனவறியு நல்லறிஞர் எக்காலமும் உதவுவார் இன்சொல்தவ றார்பொய்மை யாமிழுக் குரையார் இரங்குவார் கொலைகள்பயிலார் சங்கற்ப சித்தரவ ருள்ளக் கருத்திலுறை சாட்சிநீ யிகபரத்துஞ் சந்தான கற்பகத் தேவா யிருந்தே சமத்தஇன் பமும்உதவுவாய் சிங்கத்தை யொத்தென்னைப் பாயவரு வினையினைச் சேதிக்க வருசிம்புளே சிந்தா குலத்திமிரம் அகலவரு பானுவே தீனனேன் கரையேறவே கங்கற்ற பேராசை வெள்ளத்தின் வளரருட் ககனவட் டக்கப்பலே கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு கருணா கரக்கடவுளே. 10.

7. சித்தர்கணம்

திக்கொடு திகந்தமும் மனவேக மென்னவே சென்றோடி யாடிவருவீர் செம்பொன்மக மேருவொடு குணமேரு என்னவே திகழ்துருவம் அளவளாவி உக்ரமிகு சக்ரதர னென்னநிற் பீர்கையில் உழுந்தமிழும் ஆசமனமா வோரேழு கடலையும் பருகவல் லீரிந்த்ரன் உலகும்அயி ராவதமுமே கைக்கெளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககனவட் டத்தையெல்லாம் கடுகிடை யிருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் மிக்கசித் திகளெலாம் வல்லநீ ரடிமைமுன் விளங்குவரு சித்திஇலிரோ வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே . 1. பாட்டளி துதைந்துவளர் கற்பகநல் நீழலைப் பாரினிடை வரவழைப்பீர் பத்மநிதி சங்கநிதி இருபாரி சத்திலும் பணிசெய்யுந் தொழிலாளர்போல் கேட்டது கொடுத்துவர நிற்கவைப் பீர்பிச்சை கேட்டுப் பிழைப்போரையுங் கிரீடபதி யாக்குவீர் கற்பாந்த வெள்ளமொரு கேணியிடை குறுகவைப்பீர் ஓட்டினை எடுத்தா யிரத்தெட்டு மாற்றாக ஒளிவிடும் பொன்னாக்குவீர் உரகனும் இளைப்பாற யோகதண் டத்திலே உலகுசுமை யாகவருளால் மீட்டிடவும் வல்லநீ ரென்மனக் கல்லையனல் மெழுகாக்கி வைப்பதரிதோ வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே . 2. பாரொடுநன் னீராதி யொன்றொடொன் றாகவே பற்றிலய மாகுபோழ்து பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடி னதற்குமீதே நீரிலுறை வண்டாய்த் துவண்டுசிவ யோகநிலை நிற்பீர் விகற்பமாகி நெடியமுகி லேழும்பரந்துவரு டிக்கிலோ நிலவுமதி மண்டலமதே ஊரென விளங்குவீர் பிரமாதி முடிவில்விடை ஊர்தியரு ளாலுலவுவீர் உலகங்கள் கீழ்மேல வாகப் பெருங்காற் றுலாவின்நல் தாரணையினால் மேருவென அசையாமல் நிற்கவல் லீருமது மேதக்க சித்திஎளிதோ வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே . 3. எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான் யாதினும் அரிதரிதுகாண் இப்பிறவி தப்பினா லெப்பிறவி வாய்க்குமோ ஏதுவருமோ அறிகிலேன் கண்ணகல் நிலத்துநான் உள்ளபொழு தேஅருட் ககனவட் டத்தில்நின்று காலூன்றி நின்றுபொழி யானந்த முகிலொடு கலந்துமதி யவசமுறவே பண்ணுவது நன்மைஇந் நிலைபதியு மட்டுமே பதியா யிருந்ததேகப் பவுரிகுலை யாமலே கெளரிகுண் டலியாயி பண்ணவிதன் அருளினாலே விண்ணிலவு மதியமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவே னுமதடிமைநான் வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே . 4. பொய்திகழும் உலகநடை என்சொல்கேன் என்சொல்கேன் பொழுதுபோக் கேதென்னிலோ பொய்யுடல் நிமித்தம் புசிப்புக் கலைந்திடல் புசித்தபின் கண்ணுறங்கல் கைதவ மலாமலிது செய்தவம தல்லவே கண்கெட்ட பேர்க்கும்வெளியாய்க் கண்டதிது விண்டிதைக் கண்டித்து நிற்றலெக் காலமோ அதையறிகிலேன் மைதிகழு முகிலினங் குடைநிழற் றிடவட்ட வரையினொடு செம்பொன்மேரு மால்வரையின் முதுகூடும் யோகதண் டக்கோல் வரைந்துசய விருதுகாட்டி மெய்திகழும் அட்டாங்க யொசபூ மிக்குள்வளர் வேந்தரே குணசாந்தரே வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே. 5. கெசதுரக முதலான சதுரங்க மனவாதி கேள்வியி னிசைந்துநிற்பக் கெடிகொண்ட தலமாறு மும்மண்ட லத்திலுங் கிள்ளாக்குச் செல்லமிக்க தெசவிதம தாய்நின்ற நாதங்க ளோலிடச் சிங்காச னாதிபர்களாய்த் திக்குத் திகந்தமும் பூரண மதிக்குடை திகழ்ந்திட வசந்தகாலம் இசையமலர் மீதுறை மணம்போல ஆனந்தம் இதயமேற் கொள்ளும்வண்ணம் என்றைக்கு மழியாத சிவராச யோகராய் இந்தராதி தேவர்களெலாம் விசயசய சயவென்ன ஆசிசொல வேகொலு இருக்குநும் பெருமைஎளிதோ வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே. 6. ஆணிலே பெண்ணிலே என்போல ஒருபேதை அகிலத்தின் மிசையுள்ளதோ ஆடிய கறங்குபோ லோடியுழல் சிந்தையை அடக்கியொரு கணமேனும்யான் காணிலேன் திருவருளை யல்லாது மெளனியாய்க் கண்மூடி யோடுமூச்சைக் கட்டிக் கலாமதியை முட்டவே மூலவெங் கனலினை எழுப்பநினைவும் பூணிலேன் இற்றைநாட் கற்றதுங் கேட்டதும் போக்கிலே போகவிட்டுப் பொய்யுலக னாயினேன் நாயினுங் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் வீணிலே யலையாமல் மலையிலக் காகநீர் வெளிப்படத் தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே. 7. கன்னலமு தெனவுமுக் கனியெனவும் வாயூறு கண்டெனவும் அடியெடுத்துக் கடவுளர்கள் தந்ததல அழுதழுது பேய்போல் கருத்திலெழு கின்றவெல்லாம் என்னதறி யாமையறி வென்னுமிரு பகுதியால் ஈட்டுதமி ழென் தமிழினுக் கின்னல்பக ராதுலகம் ஆராமை மேலிட் டிருத்தலால் இத்தமிழையே சொன்னவ னியாவனவன் முத்திசித் திகளெலாந் தோய்ந்த நெறியேபடித்தீர் சொல்லுமென அவர்நீங்கள் சொன்னஅவை யிற்சிறிது தோய்ந்தகுண சாந்தனெனவே மின்னல்பெற வேசொல்ல அச்சொல்கேட் டடிமைமனம் விகசிப்ப தெந்தநாளோ வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே. 8. பொற்பினொடு கைகாலில் வள்ளுகிர் படைத்தலால் போந்திடை யொடுக்கமுறலால் பொலிவான வெண்ணீறு பூசியே அருள்கொண்டு பூரித்த வெண்ணீர்மையால் எற்பட விளங்குகக னத்திலிமை யாவிழி இசைந்துமேல் நோக்கம்உறலால் இரவுபக லிருளான கனதந்தி படநூறி இதயங் களித்திடுதலால் பற்பல விதங்கொண்ட புலிகலையி னுரியது படைத்துப்ர தாபமுறலால் பனிவெயில்கள் புகுதாமல் நெடியவான் தொடர்நெடிய பருமர வனங்களாரும் வெற்பினிடை யுறைதலால் தவராச சிங்கமென மிக்கோ ருமைப்புகழ்வர்காண் வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே. 9 கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும்அறி வில்லாதஎன் கர்மத்தை யென்சொல்கேன்மதியையென் சொல்லுகேன் கைவல்ய ஞானநீதி நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று நாட்டுவேன் கர்மமொருவன் நாட்டினா லோபழைய ஞானமுக்கியமென்று நவிலுவேன் வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்லதமி ழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியி வசனங்கள் சிறிதுபுகல்வேன் வெல்லாம லெவரையும் மருட்டிவிட வகைவந்த வித்தையென் முத்திதருமோ வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே. 10.

8. ஆனந்தமானபரம்

கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்குமக் குணமொன்றும் ஒன்றிலேன்பால் கோரமெத் தனைபட்ச பாதமெத் தனைவன் குணங்களெத் தனைகொடியபாழ்ங் கல்லாமை யெத்தனை யகந்தையெத் தனைமனக் கள்ளமெத் தனையுள்ளசற் காரியஞ் சொல்லிடினும் அறியாமை யெத்தனை கதிக்கென் றமைத்தஅருளில் செல்லாமை யெத்தனைவிர் தாகோட்டி யென்னிலோ செல்வதெத் தனைமுயற்சி சிந்தையெத் தனைசலனம் இந்த்ரசா லம்போன்ற தேகத்தில் வாஞ்சைமுதலாய் அல்லாமை யெத்தனை யமைத்தனை யுனக்கடிமை யானேன் இவைக்கும் ஆளோ அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி ஆனந்த மானபரமே. 1. தெருளாகி மருளாகி யுழலுமன மாய்மனஞ் சேர்ந்துவளர் சித்தாகிஅச் சித்தெலாஞ் சூழ்ந்தசிவ சித்தாய் விசித்ரமாய்த் திரமாகி நானாவிதப் பொருளாகி யப்பொருளை யறிபொறியு மாகிஐம் புலனுமாய் ஐம்பூதமாய்ப் புறமுமாய் அகமுமாய்த் தூரஞ் சமீபமாய்ப் போக்கொடு வரத்துமாகி இருளாகி யொளியாகி நன்மைதீ மையுமாகி இன்றாகி நாளையாகி என்றுமாய் ஒன்றுமாய்ப் பலவுமாய் யாவுமாய் இவையல்ல வாயநின்னை அருளாகி நின்றவர்க ளறிவதல் லாலொருவர் அறிவதற் கெளிதாகுமோ அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி ஆனந்த மானபரமே. 2. மாறுபடு தர்க்கந் தொடுக்கஅறி வார்சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனதுழல மாலாகி நிற்கஅறிவார் வேறுபடு வேடங்கள் கொள்ளஅறி வாரொன்றை மெணமெணென் றகம்வேறதாம் வித்தையறி வார்எமைப் போலவே சந்தைபோல் மெய்ந்நூல் விரிக்கஅறிவார் சீறுபுலி போற்சீறி மூச்சைப் பிடித்துவிழி செக்கச் சிவக்கஅறிவார் திரமென்று தந்தம் மதத்தையே தாமதச் செய்கைகொடும் உளற அறிவார் ஆறுசம யங்கடொறும் வேறுவே றாகிவிளை யாடுமுனை யாவரறிவார் அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி ஆனந்த மானபரமே. 3. காயிலை யுதிர்ந்தகனி சருகுபுனல் மண்டிய கடும்பசி தனக்கடைத்துங் கார்வரையின் முழையிற் கருங்கல்போ லசையாது கண்மூடி நெடிதிருந்தும் தீயினிடை வைகியுந் தோயமதில் மூழ்கியுந் தேகங்கள் என்பெலும்பாய்த் தெரியநின் றுஞ்சென்னி மயிர்கள்கூ டாக்குருவி தெற்றவெயி லூடிருந்தும் வாயுவை யடக்கியு மனதினை யடக்கியு மெளனத்தி லேயிருந்தும் மதிமண்ட லத்திலே கனல்செல்ல அமுதுண்டு வனமூடி ருந்தும் அறிஞர் ஆயுமறை முடிவான அருள்நாடி னாரடிமை அகிலத்தை நாடல்முறையோ அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி ஆனந்த மானபரமே. 4. சுத்தமும் அசுத்தமும் துக்கசுக பேதமுந் தொந்தமுடன் நிர்த்தொந்தமும் ஸ்தூலமொடு சூட்சமமும் ஆசையும் நிராசையுஞ் சொல்லுமொரு சொல்லின் முடிவும் பெத்தமொடு முத்தியும் பாவமொ டபாவமும் பேதமொ டபேதநிலையும் பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும் பெண்ணினுடன் ஆணும்மற்றும் நித்தமும் அநித்தமும் அஞ்சனநி ரஞ்சனமும் நிட்களமும் நிகழ்சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோ டநாதியும் நிர்விடய விடயவடிவும் அத்தனையும் நீயலதெள் அத்தனையும் இல்லையெனில் யாங்களுனை யன்றியுண்டோ அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி ஆனந்த மானபரமே. 5. காராரும் ஆணவக் காட்டைக் களைந்தறக் கண்டகங் காரமென்னுங் கல்லைப் பிளந்துநெஞ் சகமான பூமிவெளி காணத் திருத்திமேன்மேல் பாராதி யறியாத மோனமாம் வித்தைப் பதித்தன்பு நீராகவே பாய்ச்சியது பயிராகு மட்டுமா மாயைவன் பறவையணு காதவண்ணம் நேராக நின்றுவிளை போகம் புசித்துய்ந்த நின்னன்பர் கூட்டமெய்த நினைவின் படிக்குநீ முன்னின்று காப்பதே நின்னருட் பாரமென்றும் ஆராரும் அறியாத சூதான வெளியில்வெளி யாகின்ற துரியமயமே அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி ஆனந்த மானபரமே. 6. வானாதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலையாகி வளைகடலுமாய் மதியாகி இரவியாய் மற்றுள எலாமாகி வான்கருணை வெள்ளமாகி நானாகி நின்றவனு நீயாகி நின்றிடவு நானென்ப தற்றிடாதே நான்நான் எனக்குளறி நானா விகாரியாய் நானறிந் தறியாமையாய்ப் போனால் அதிட்டவலி வெல்லஎளி தோபகல் பொழுதுபுகு முன்கண்மூடிப் பொய்த்துகில்கொள் வான்தனை எழுப்பவச மோஇனிப் போதிப்ப தெந்தநெறியை ஆனாலும் என்கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்பால் எடுத்துமொழிவேன் அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி ஆனந்த மானபரமே. 7. பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின்னருள் புலப்பட அறிந்துநிலையாப் புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மைபோல் பொருளலாப் பொருளைநாடும் வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்றென்னைநீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவ தல்லாது வேறுகதி யேதுபுகலாய் துய்யனே மெய்யனே உயிரினுக் குயிரான துணைவனே யிணையொன்றிலாத் துரியனே துரியமுங் காணா அதீதனே சுருதிமுடி மீதிருந்த ஐயனே அப்பனே எனும்அறிஞர் அறிவைவிட் டகலாத கருணைவடிவே அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி ஆனந்த மானபரமே. 8. எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும்என் இதயமும் ஒடுங்கவில்லை யானெனும் அகந்தைதான் எள்ளளவு மாறவிலை யாதினும் அபிமானம்என் சித்தமிசை குடிகொண்ட தீகையொ டிரக்கமென் சென்மத்து நானறிகிலேன் சீலமொடு தவவிரதம் ஒருகனவி லாயினுந் தெரிசனங் கண்டும்அறியேன் பொய்த்தமொழி யல்லால் மருந்துக்கும் மெய்ம்மொழி புகன்றிடேன் பிறர்கேட்கவே போதிப்ப தல்லாது சும்மா இருந்தருள் பொருந்திடாப் பேதைநானே அத்தனை குணக்கேடர் கண்டதாக் கேட்டதா அவனிமிசை யுண்டோசொலாய் அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி ஆனந்த மானபரமே. 9. எக்கால முந்தனக் கென்னவொரு செயலிலா ஏழைநீ என்றிருந்திட் டெனதாவி யுடல்பொருளும் மெளனியாய் வந்துகை ஏற்றுநம தென்றஅன்றே பொய்க்கால தேசமும் பொய்ப்பொருளில் வாஞ்சையும் பொய்யுடலை மெய்யென்னலும் பொய்யுறவு பற்றலும் பொய்யாகு நானென்னல் பொய்யினும் பொய்யாகையால் மைக்கா லிருட்டனைய இருளில்லை இருவினைகள் வந்தேற வழியுமில்லை மனமில்லை யம்மனத் தினமில்லை வேறுமொரு வரவில்லை போக்குமில்லை அக்காலம் இக்கால மென்பதிலை எல்லாம் அதீதமய மானதன்றோ அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி ஆனந்த மானபரமே. 10.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக