வெள்ளி, ஆகஸ்ட் 04, 2023

சித்தர் பாடல்களில் இருந்து ....

                  மஹான் ஸ்ரீ பட்டினத்து சுவாமிகள் பாடல் .




வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு’
எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத பூசையன் றோகுரு நாதன் மொழிந்ததுவே 

வெட்டாத சக்கரம்
பேசாத மந்திரம்
வேறொருவர்க்கு எட்டாத புட்பம்
இறையாத தீர்த்தம்
இனி முடிந்து கட்டாத லிங்கம்
கருதாத நெஞ்சம்
கருத்தினுள்ளே முட்டாத பூசை 
அன்றோ குருநாதன் மொழிந்ததுவே .



உடலில் உள்ள மூலாதாரம் முதலான ஆறு சக்கரங்கள் , தியானத்தில் கிடைக்கும் பேசா நிலை நிற்சிந்தனை இன்றி இருக்கும் பெரும் மௌனம் , தியானத்தில் தோன்றும் துரிய மலர், உள்ளே அண்ணாக்கில் சுரக்கும் அமுதம் , துணி முடிந்து கட்டாத அண்டம் என்னும் லிங்கம், எண்ணத்தில் அலைபாயாத நெஞ்சம், கருத்தில் செய்யும் பூசை ஆகியவற்றை எல்லாம் உரைத்தார் என் குருநாதர் என்கிறார் பட்டினத்தார் .  

                 சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!