சித்தர் பாடல்களில் இருந்து ....
மஹான் ஸ்ரீ பட்டினத்து சுவாமிகள் பாடல் .
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் தூத்துக்குடி -2 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191
சித்தர் பாடல்களில் இருந்து ....
மஹான் ஸ்ரீ பட்டினத்து சுவாமிகள் பாடல் .
அம்பாள் வாலையரசி பூசை .....
வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே !
-கொங்கணச்சித்தர் வாலைக்கும்மி .
அண்டமத்தனையும் இயக்கும் சக்தி வாலையே , எல்லா உயிர்க்கும் புவனம் அனைத்திற்கும் இயக்கத்திற்கு காரணமாய் இருப்பவளும் அவளே அன்பிலே குழந்தை வடிவாய் ஆற்றலிலே மனோன்மணியாய் அனைத்துயிர்கட்கும் அருள்பவள் என் அன்னை வாலையே .
ஆதிசக்தியின் குழந்தை வடிவமே வாலை இவளை பூசிக்காமல் சித்தி என்பது சத்தியமாய் சாத்தியமில்லை . பத்து வயது சிறுமியாய் இவளை பூஜித்து பூசையை ஆரம்பித்து படிப்படியாக சித்தி பெற்று பின் அன்னை மனோன்மணி தெய்வமாக பூசை முடித்து அவள் அருளாலே அப்பன் அருள் பெற்று மெய்யான நிலையை அடைந்தார்கள் சித்தர் பெருமக்கள் .
சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்
சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!