- காயக்கப்பல்
ஏலேலோ ஏகரதம் சர்வரதம்பிரமரதம் ஏலேலோ ஏலலிலோ
பஞ்சபூதப் பலகை கபபலாய்ச் சேர்த்துபாங்கான ஓங்குமர பாய்மரம் கட்டிநெஞ்சு மனம் புத்தி ஆங்காரஞ்சித்தம்மானாபிமானங் கயிறாகச் சேர்த்து
ஐந்தெழுத்தைக் கட்டி சாக்காகயேற்றிஐம்புலன் தனிலே சுக்கானிருத்திநெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கிசிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து
தஞ்சலான வெள்ளத்தில் தானேஅகண்ட ரதம் போகுதடா ஏலேலோ ஏலேலோகளவையுங் கேள்வையுங் தள்ளுடா தள்ளுகருனைக்கடலிலே தள்ளுடா கப்பல்
நிற்குனந்தன்னிலே தள்ளுடா தள்ளுநிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல்மூக்கணை முன்றையுந் தள்ளுடா தள்ளுமுப்பாலுக்கப்பாலே தள்ளுடா கப்பல்
திக்குதிசைஎங்கும் தள்ளுடா தள்ளுதிருமந்திரஞ் சொல்லி தள்ளுடா தள்ளுபக்கமுடன் கீழ்மேலும் தள்ளுடா தள்ளுபரவெளிக்கப்பாலே போகுதடா கப்பல் ஏலேலோ
தந்தை தாய் சுற்றமும் சகலமுமறந்துதாரம் சகோதரம் தானதும் மறந்துபந்தமும் நேசமும் பாசமும் மறந்துபதினாலு லோகமும் தனையும் மறந்து
இந்திரியர்கள் இரட்சித்த கப்பலிலேறிஏகாந்தமான தொரு கடலிலே தள்ளிஅந்திரமான வெளி அருளானந்த வெள்ளத்தில்அழுந்து தையோ கப்பல் ஏலேலோ ஏலேலோ
இந்த பாடல் இயற்றிய சித்தர் யார் என்பது தெரியவில்லை
தொகுப்பு : திருவடி முத்து கிருஷ்ணன்
மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் தூத்துக்குடி -2 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191
செவ்வாய், மே 31, 2011
சித்தர் பாடல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக