வியாழன், டிசம்பர் 19, 2013

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசக பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 



பாடல்-6

மானே நீ நென்னலை நாளைவந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வானவார் கழல் பாடி வந்தோர்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உன்கே உறும் எமக்கும்
ஏனோர்கக்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

மான் போன்ற பார்வையினை உடைய பெண்ணெ!நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன் என்று கூநினாயே அந்தச் சொல் எந்தத்திசையை நோக்கிப் போனது. ஒருசிறிதும் வெக்கம் இல்லாமல் இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கிறாய். உனக்கு இன்னும் பொழுது விடியவில்லை போலும்.

வானுலகும் மண்ணுலகும் பிற உலகங்களும் அறிதற்குஅருமை உடையவன் தானாக வலியவந்து ,நம்மிடம் அருள்பாலித்து நம்மை அடிமை கொள்கிறான்.அவனதுபெருமையைப் பாடிவந்த எங்களுக்கு உன்வாய் திறந்து ஒனறும் கூறாது உறங்ககின்றாய்.ஊன் உருக அப்பெருமானது புகழைப்பாடாது இருப்பது உனக்கே பொருந்தும்போலும்

அப்படி இராது ,நமக்கும் பிறருக்கும் தலைவனாகிய அப்பெருமானின் பெருமைகளை, நீயும் எங்களோடு சேர்ந்து பாடுவாயாக.என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

                                   
                                                                                  இறை பணியில் 

                                                                                      பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!

        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக