வெள்ளி, ஜூலை 29, 2011

சிந்திக்க ஒரு கதை


                                                                சிவமே ஜெயம் 
          
                ஒரு துறவி தனது சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார் . உபதேசம் முடிந்தவுடன் தியானத்திற்கான நேரம் அனைவரும் ஆயத்தமாகி கொண்டிருக்கும் வேளையில் ஒரு பூனை அங்கு வந்தது அது மிகவும் பசியுடன் காணப்பட்டது . இளகிய மனம் படைத்த அந்த துறவி அந்த பூனைக்கு உணவு கொடுத்தார் . அந்த பூனை அது முதற்கொண்டு அந்த ஆசிரமத்தையே தனது இருப்பிடமாக கருதி அங்கேயே இருந்தது.ஒரு நாள் அனைவரும் தியானம் செய்துக்கொண்டிருக்கும் வேளையில் பூனை அவர்களுக்கு இடையூறு செய்தது இதை பார்த்த துறவி அந்த பூனையை பிடித்து தூணில் கட்டுமாறு உத்தரவிட்டார் .பூனை கட்டப்பட்டது . பின்பு ஒவ்வொரு நாளும் தியானத்திற்கு முன்பாக அதை கட்டிப்போடும் பழக்கம் ஆனது .அந்த துறவி இறந்து விட்டார் .பின்பு வந்த குருவும் அந்த பூனையை அங்கே இருக்கும் நாலாவது தூணில் கட்டிபோடுங்கள் அப்போதுதான் தியானம் கைகூடும் என தனது சீடர்களுக்கு கூறினார். பூனையும் இறந்து விட்டது . இப்போது பூனை இருந்தால் தான் தியானம் செய்ய முடியும் என்கிற நிலை உருவானது . உடனே அனைவரும் வெளியே சென்று ஒரு பூனையை தேடி பிடித்துக் கொண்டு வந்து நாலாவது தூணில் கட்டிய பின் தியானத்தை தொடர்ந்தனர் .  


                 இந்த கதையில் இருக்கும் கருத்து என்ன ? யாரை குற்றம் சொல்வது இயல்பாய் நடந்த நிகழ்வு கட்டாயமாக்கப்பட்டது .இதே போல்தான் நாமும் பிறரை பின்பற்றுவதில் தான் கவனம் செலுத்துவோமே தவிர உண்மை என்ன என்பதை யோசிக்க மாட்டோம் . கடவுளுக்கு நாம் புரோக்கர்களை வைத்துள்ளோம் நாம் கடவுளை அடைய அவர்களுக்கு கமிஷன் கொடுத்து சிபாரிசு செய்ய சொல்வது போல் அவர்கள் பின்னால் போகிறோம் . நாம் நம்மை உணர்ந்தால் இது போல் நடக்காது . என் குருநாதர் சொல்வார் சிவத்தை தவிர அனைவரும் (அனைத்து தெய்வங்களும் ) வணக்கத்திற்குரியதே தவிர வணங்கப்பட வேண்டியவை அல்ல . ஆகவே உண்மையான சிவபதம் தேடுவோம் ..இதைத்தான் திருமூலரும் தன்னுடைய திருமந்திரத்தில் 

சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை 
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் 
தவனச் சடைமுடி தாமரையானே 


குதம்பை சித்தர் 

செத்துப்பிறக்கின்ற தேவைத்துதிப்போர்க்கு
 முத்தி தான் இல்லையடி - குதம்பாய் 
முத்தி தான் இல்லையடி 

என்று தனது பாடல்களில் சொல்லி இருக்கிறார் 

இதே கருத்தை ஒத்து அகப்பேய் சித்தரும் சிவபதம் அடைவதற்கு எந்த கஷ்டமும் வேண்டாம் யாருடைய சிபாரிசும் வேண்டாம் தன மனம் எனும் பேயிடம் சொல்கிறார் .
         
நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய் 
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே .....அகப்பேய்
நீ ஒன்றுஞ் சொல்லாதே.



கடுவெளி சித்தர் தனது பாடல்களில்  

மெய்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 

வஞ்சகமாம் வாழ்வைநம்பிச் சஞ்சலங்கள் அடையோம்
மகத்தான மகரிடிகள் பதங்காணச் சடையோம் 
பஞ்சமா பாதகரை ஓர்நாளும் பாரோம் 
பாவவினை பற்றருத்தோர் சிநேகிதங்கள் மறவோம் .

மௌன சித்தர் தனது பாடல்களில் இவ்வாறு கூறுகிறார் . இதைத் தொடர்ந்து தடங்கண் சித்தர் தனது பாடல்களில் உண்மை நிலையை குறிப்பிடுகிறார் 
    
மெய்யுணர் வெய்தித் தனைமுதல் உணர்ந்து 
       மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும் 
பொய்மிகு புலன்கள் கடந்து பேருண்மை 
        புரிதலே இறையுணர் வன்றோ !
செய்கையால் வழக்கால் அச்சத்தால் மடத்தால் 
       செய்பொருள் இறைஎனத் தொழுவார் ?
உய்வரோ இவர்தாம் ?இதுகொலோ சமயம்?
          உணர்விலார்க் குழலுமென் நெஞ்சே !!

கொங்கன சித்தர் தனது பாக்களில் 


சாத்திரம் பார்த்திருந்தாலுந் தானுமென்ன? வேதம்
தானுமே பார்த்திருந் தாலுமென்ன?
சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
சொல்லை யறிந்தல்லோ காணவேணும்?

காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்
காரிய மில்லையென் றேநினைத்தால்
காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
காரிய முண்டுதியானஞ் செய்தால்
      

ஆகவே பொய்யான ஆன்மீகவாதிகளின் பின்னால் செல்லாமல் 

                                    உண்மை நிலை அறிவோம் !!




 சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!
                      
                              சிவமே ஜெயம் !!!

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக