திங்கள், ஏப்ரல் 27, 2015

சீரான வாழ்விற்கு சித்தர்களின் அருளுரைகள் ..


      மகான் ஸ்ரீ பட்டினத்தார் 

                      அருளிய உபதேசங்கள்





அறந்தா னியற்று மவனிலுங் கோடியதி கமில்லந்
துறந்தா னவனிற்சதகோடி யுள்ளத்துற வுடையோன்
மறந்தா னறக்கற்றறிவோ டிருந்திரு வாதனையற்
றிருந்தான் பெருமையை யென் சொல்லுவேன் கச்சியேகம்பனே.


இல்லறத்தில் உள்ள கடமைகளை சரிவர செய்து மறுமையில் சொர்க்கத்தை அடையும் இல்லறத்துள் இருப்பவனிலும் புறப்பற்றை நீங்கப் பெற்றவன் ஒரு கோடி மடங்கு உயர்ந்தவனாவான் . அவனைக் காட்டிலும் அகப்பற்றை நீக்கி சந்நியாச நிலை அடைந்தவன்     நூறு கோடி மடங்கு உயர்ந்தவனாவான். தீவினையை நீக்கி பாவ புண்ணியங்களின் தாக்கம் தவிர்த்து நல்ல நூல்களை கற்று தவ ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் மகா துறவியின் பெருமையை என்னவென்று சொல்லுவேன் திருக்கச்சியில் அருள் புரியும் ஏகம்ப நாதனே .

கட்டி யணைத்திடும் பெண்டீருமக்களுங் காலத்தச்சன்
வெட்டி முறிக்குமரம்போலற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார் மயானங் குறுகியப்பாற்
யெட்டியடி வைப்பரோ யிறைவாகச்சி யேகம்பனே .


தச்சன் வெட்டும் மரம் வீழ்வது போல காலத்தச்சன் என்னும் கூற்றுவன் நம் உயிரை வாங்கி நம் உடலை வீழும் படி செய்து விட்டால் , கட்டிய மனையாளும் நாம் அணைத்திடும் மக்களும் என்ன செய்வார்கள் பறைகளை ஒலித்து ஒப்பாரி வைப்பார் இடுகாடு வரை உடன் வந்து அழுவர் . அந்த இடுகாட்டை தாண்டி அவர்களால் ஒரு அடி எடுத்து வைக்க இயலுமா , என் இறைவனே கச்சியில் அருள் புரியும் ஏகம்பர நாதனே .


                          சிவமேஜெயம் - திருவடி முத்து கிருஷ்ணன் 


       சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக