திங்கள், ஏப்ரல் 20, 2015


போதை பழக்கம் பற்றி சித்தர்கள் 


சிவனை வணங்குவோர் கஞ்சா மற்றும் போதை பொருள் உட் 
கொள்ளலாம் என்கிற தவறான கூற்றுக்கு சித்தர்களின்  அறிவுரை  

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கியே கட்குடி யாதே
அஞ்ச வுயிர்மடி யாதே - புத்தி 

அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.


  போதை என்பது நம் அறிவை மயக்கி நம்மை மூர்க்கனாக மூடர்களாக மாற்றும் ஆதலால் போதைப் புகை , மற்றும் மதுபானங்களையும் அருந்துதல் தவறானது எண்டு கடுவெளியார் சாடுகிறார் .

  திருமூலரும் தனது திருமந்திரத்தில் 

காமமும் கள்ளும் கலதி கட்கே ஆகும்
மா மலமும் சமயத்துள் மயல் உறும்
போ மதி ஆகும் புனிதன் இணை அடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே.


காமமும் , மதுவும் மக்களை கெட வைக்கும் இஃது தீய குணமுடைய கீழ் மக்களுக்கு உரியன ,  நல் மாந்தர் எது செய்வாரென்றால் தூய்மையான வெள்ளை நிறமுடைய திருநீறினை அணிந்து , தம்மை அண்டியவரை காத்தருளும் திருவடியை உடைய புனிதனை போற்றி அவன் திருவடி மலர்களில் கிடந்து அந்த இனிமையான தேனை உண்டு அந்த உணர்விலே இருப்பார்கள் . திருவடி உணர்வு அவர்களை எந்தத் தீங்கும் சேரா வண்ணம் காக்கும் . 

                                    என்று திருமூலரும் கூறுகிறார் 




               சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 



                                       










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக