செவ்வாய், நவம்பர் 15, 2011

பாரதியார் பாடல்கள்

    பாரதியார் பாடிய 
  முருகன் பாடல்கள்  




வீரத் திருவிழிப் பார்வையும் - வெற்றி 
      வேலும் மயிலும்என் முன்னின்றே- எந்த
நேரத் திலும்என்னைக் காக்குமே - அன்னை 
     நீலி பராசக்தி தண்ணருட்- கரை 
ஓரத்திலே புணை கூடுதே - கந்தன் 
      ஊக்கத்தை என்னுளம் நாடுதே - மலை 
வாரத் திலேவிளை யாடுவான் - என்றும் 
      வானவர் துன்பத்தைச் சாடுவான் .





வேடர் கனியை விரும்பியே - தவ 
      வேடம் புனைந்து திரிகுவான் - தமிழ் 
நாடு பெரும்புகழ் சேரவே முனி 
      நாதனுக் கிம்மொழி கூறுவான் - சுரர் 
பாடு விடிந்து மகிழ்ந்திட - இருட் 
      பார மலைகளைச் சீறுவான் - மறை 
யேடு தரித்த முதல்வனும் - குரு 
      என்றிட மெய்ப்புகழ் ஏறுவான் .



தேவர் மகளை மணந்திடத் - தெற்குத் 
      தீவி லசுரனை மாய்த்திட்டான் - மக்கள் 
யாவருக் குந்தலை யாயினான் - மறை 
     அர்த்த முணர்த்துநல் வாயினான் - தமிழ்ப் 
பாவலர்க் கின்னருள் செய்குவான் - இந்தப் 
      பாரிவ்ல அறமழை பெய்குவான் - நெஞ்சின் 
ஆவ லறிந்தருள் கூட்டுவான் - நித்தம் 
      ஆண்மையும் வீரமும் ஊட்டுவான் .



தீவளர்த் தேபழ வேதியர் - நின்தன் 
      சேவகத் தின்புகழ் காட்டினார் - ஒளி 
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார் - நின்றன் 
மேன்மையி னாலறம் நாட்டினார்! - ஐய! 
      நீவள ருங்குரு வெற்பிலே - வந்து 
நின்றுநின் சேவகம் பாடுவோம் - வரம் 
      ஈவள் பராசக்தி யன்னைதான் - உங்கள் 
இன்னருளே யென்று நாடுவோம் .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக