திங்கள், மார்ச் 30, 2015


அட்ட வீரட்டானக் கோவில்கள் ...





சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த இடங்கள் வீரட்டானக் கோவில்கள் ஆகும் . எட்டுக் கோவில்கள் ஆதலலால்  அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது .

1 . திருக்கண்டியூர் 
ஈசனை போலவே ஐந்து தலையை உடையவனாக இருந்தான் பிரமன் இதனால் நான் என்கிற அகந்தை  அதிகமாக , ஈசன் அவனுடைய ஒரு தலையை  கிள்ளி நான்முகனாக்கி அவனுடைய அகந்தையை அழித்த தலம் .

2 . திருக்கோவலூர்
அந்தகாசுரன் என்னும் அரக்கனை தன்  சூலத்தால் வதைத்த இடம் . 

3 . திருவதிகை  
கமலாட்சன் , விருபாட்சன் , வித்யும்மாலி  ஆகிய மூன்று அரக்கர்ளும் ஆட்சி செய்த மூன்று புரங்களையும் சிரித்து எரித்த தலம் . 

4 . திருப்பறியலூர் 
தட்சன் கர்வம் கொண்டு சிவ நிந்தை செய்து அவரை அவமரியாதை செய்தான் வெகுண்ட ஈசன் அவனுடைய வேள்வி தகர்த்து தட்சன் தலையை கொய்து அவன் கர்வம் அடக்கிய தலம் .

5 .  திருவிற்குடி 
பாவங்கள் பல புரிந்து மக்களை எல்லாம் கொடுமை படுத்திய சலந்திரன் என்னும் அசுரனை கொன்ற இடம் .

6 . திருவழுவூர் 
சிவபெருமானை எதிர்த்த கஜமுகாசுரன் என்னும் அசுரனை அழித்து யானையின் தோலை போர்வை போல போர்த்தி நின்ற தலம் .

7 . திருக்குறுக்கை 
கயிலை நாதன் நிட்டையில் இருக்கையில் மலரம்பு எய்த காமனை கண் விழித்து தகித்த இடம் .

8 . திருக்கடவூர்
மிருகண்டு முனிவரின் மகனான மார்கண்டேயனை காலன் பிடிக்க வரும் போது மார்கண்டேயன் சிவலிங்கத்தை இறுகப் பற்றி கொண்டார் . அவரை பிடிக்க எமன் தன் பாசக்கயிறை வீசுகையில் கயிறு சிவலிங்கத்தின் மீதும் பட்டது . தன்னை அடைக்கலம் என்று வந்த பின் காலன் கயிறு வீசியதால் ஆத்திரமடைந்து அவனைக் காலால் உதைத்த தலம் .   


ஆகிய இந்த எட்டுத் தலங்களும் ஈசனின் வீர செயல்களை பறை சாற்றும் அட்ட வீரட்டானத் தலங்களாகும் .

   
            சிவமேஜெயம் - திருவடிமுத்து கிருஷ்ணன்  

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக