திங்கள், மார்ச் 30, 2015

அட்ட வீரட்டானம் ..........

                             திருவதிகை










 திரிபுரம் எரித்தது 

அப்பர் தேவாரத்தில் இருந்து ....


கொம்புகொப் பளித்ததிங் கட்கோணல் வெண்பிறையுஞ் சூடி  
வம்புகொப் பளித்தகொன்றை வளர்சடை மேலும்வைத்துச் 
செம்புகொப் பளித்தமூன்று மதிலுடன் சுருங்க வாங்கி 
அம்புகொப் பளிக்க வெய்தாரதிகை வீரட்டானரே .   

கூர்மை வாய்ந்த கொம்பு போல வளைந்த வெண் மதியை அணிந்து நறுமணம் தவழும் கொன்றை மலரை சடையில் சூடி , உறுதியான செப்பு மதில்களை உடைய கோட்டைகளை அழிக்க வில்லை வளைத்து அம்பு தொடுத்து புரங்களை நோக்கி எய்தவர் திருவதிகை ஆளும் வீரட்டானர் .





அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புர மாவது மும் மலக் காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே.


                               - திருமூலர் திருமந்திரம் 

கங்கை நீரை சுமந்த செஞ்சடை உடைய என் அப்பன் யாவர்க்கும் முதலான் அவனே தொடக்கம் பழம் பொருட்கு எல்லாம் பழமையானவன் பரமன் . அவன் உலக உயிர்கள் உய்யும் பொருட்டு அந்த உயிர்கள் சார்ந்த மும்மலமாகிய  (ஆணவம் கன்மம் மாயை ஆகிய )காரியங்களை தன் திருவருளால் சுட்டெரித்தான் . அவ்வாறு செய்ததை மூன்று கோட்டைகளை (முப்புரம்) எரித்தான் என்று அறியாதவர்கள் கூறுவார் .
ஆனால் உண்மைதனை யாரும் அறியமாட்டார் .


                             சிவமேஜெயம் - திருவடி முத்து கிருஷ்ணன் 


       சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக