வியாழன், மார்ச் 26, 2015

அட்ட வீரட்டானம் .....

                                      திருக்கண்டியூர் 







       பிரம்மன் சிரம் கொய்தது 



எங்கும் பரந்தும் இரு நிலம் தாங்கியும்
தங்கும் படித் தவன் தாள் உணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற
அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே.

       
                           -  திருமந்திரம் 

ஆதியும் அந்தமும் இல்லாது எங்கும் நிறைந்து உலகம் தனை தாங்கி நிலையான இன்பம் தரும் ஈசனின் திருவடியை உணர்ந்து தேவர்கள் துதிக்கையிலே படைத்தல் தொழிலை செய்து வரும் பிரமன் அனைத்தும் தெரிந்தவன் தான் என்ற அகந்தையிலும் கல்வி செருக்காலும் பரமனை நிந்திக்க சினம் கொண்ட ஈசன் பிரமனின் ஐந்து தலையில் ஒன்றை கிள்ளி நான்முகனாக்கினர் . அதுபோல பிரமன் யாருடைய உந்திகமலத்தில் தோன்றினானோ அவன் தந்தையாகிய அச்சுதன் செல்வச் செருக்கால் நிலை தடுமாற அவன் உதிரத்தையும் ஏந்தி நின்றானே .

  

                        சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


          சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !! 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக