வெள்ளி, மார்ச் 27, 2015

அட்ட வீரட்டானம் .....

                                       திருவிற்குடி 






சலந்தரனை வதம் செய்தது 


எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற
அங்க முதல்வன் அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர் செய்ய நீர்மையின்
அங்கு விரல் குறித்து ஆழி செய்தானே.


                                              -    திருமூலர் திருமந்திரம் 


எல்லா இடங்களிலும் அனைத்து உயிரினங்களிலும் கலந்து இருக்கின்ற ஈசன் எம் உள்ளத்திலும் எழுந்தருளி இருக்கின்றான் . அறுசமயங்களாகிய அங்கத்தில் முதலானவன் , நான் மறைகளை ஓதி அருள்செய்தவனாவான் அவனின் பெருமைகளை உணராது வஞ்சனையே உருவான சலந்தரன் சிவபெருமானிடத்து போருக்கு வந்தான் . சலந்தரனை அழிப்பதற்கு ஈசன் திருவடியால் ஆழிப் படையை ( சக்கராயுதம் ) அமைத்து  சலந்தரன் தலையை அவ்வாழி கொண்டு துண்டித்து அழித்தான் . 


                          சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


         சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக