அட்ட வீரட்டானம் .....
திருவிற்குடி
சலந்தரனை வதம் செய்தது
எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற
அங்க முதல்வன் அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர் செய்ய நீர்மையின்
அங்கு விரல் குறித்து ஆழி செய்தானே.
அங்க முதல்வன் அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர் செய்ய நீர்மையின்
அங்கு விரல் குறித்து ஆழி செய்தானே.
எல்லா இடங்களிலும் அனைத்து உயிரினங்களிலும் கலந்து இருக்கின்ற ஈசன் எம் உள்ளத்திலும் எழுந்தருளி இருக்கின்றான் . அறுசமயங்களாகிய அங்கத்தில் முதலானவன் , நான் மறைகளை ஓதி அருள்செய்தவனாவான் அவனின் பெருமைகளை உணராது வஞ்சனையே உருவான சலந்தரன் சிவபெருமானிடத்து போருக்கு வந்தான் . சலந்தரனை அழிப்பதற்கு ஈசன் திருவடியால் ஆழிப் படையை ( சக்கராயுதம் ) அமைத்து சலந்தரன் தலையை அவ்வாழி கொண்டு துண்டித்து அழித்தான் .
சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்
சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக