வியாழன், ஜூன் 05, 2014

மாணிக்க வாசக பெருமான் அருள் செய்த 


                  திருவாசகத்திலிருந்து 























சில வாசகம் 

எம்பிரான் போற்றி வானத்து
அவர் அவர் ஏறு போற்றி
கொம்ப ரார்மருங் குல்மங்கை
கூறவெள் நீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத்
திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை
ஆளுடை ஒருவ போற்றி
எம்மை என்றும் ஆளுமை புரியும் எம்பெருமானே உமக்கு வணக்கம் . விண்ணோர் தமக்கு அருள் புரிந்து அனைத்தையும் ஆண்டருளும் அரசனே உமக்கு வணக்கம் . பெண்ணை மேனியில் பாதியாய் கொண்டு வெள்ளை நீறு பூசியவனே வணக்கம்.செஞ்சுடரே எம் ஈசனே தில்லை அம்பலத்தில் நடம் செய்யும் நாதனே உமக்கு வணக்கம். உயர்ந்த பெரும் பரம் பொருளே என்னை ஆளும் ஒருவனே உம்மை வணங்குகிறேன் . 

வான் ஆகி மண் ஆகி
வளி ஆகி ஓளி ஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி
உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோன் ஆகி யான் எனது என்று
அவர் அவரைக் கூத்தாட்டு
வான் ஆகி நின்றாயை
என் சொல்லி வாழ்த்துவனே


 ஆகாயம் . மண் , காற்று ,நீர் , நெருப்பு  ஆகிய பஞ்ச பூதங்களும் நீயே எம்பெருமானே . உடலாகவும் , உயிராகவும் இருப்பவனும் நீயே . தோன்றும் பொருளாகவும்,தோன்றாப் பொருளாகவும் விளங்குபவனும் நீயே . நான் என்ற ஆணவம் கொண்டு மாயை தனில் ஆட வைப்பதும் நீயே . வான் கடந்து நின்ற உன் பெருமை தன்னை என்ன சொல்லிப் புகழ்வேன் . இறைவா என்னைக் காத்தருள வேண்டுமையா .




                          என்றும் இறை பணியில் ..

                                                    திருவடி முத்துகிருஷ்ணன் 

                                          சிவமேஜெயம் !!

    சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக