வியாழன், ஜூன் 26, 2014



அடியேன் எழுதிய பாடல்கள் ...............




அடைக்கலக் கண்ணிகள் 



அம்பலத்திலாடும் ஆண்டவனே உனக்கு அடைக்கலம் 

ஆடிய பொற்பாதமே ஆண்டு கொள்வாய் உனக்கு அடைக்கலம் 

இன்னல் தீர்ப்பவனே எங்கள் ஆலவாயனே உனக்கு அடைக்கலம் 

ஈசனே எந்தையே எம் சிந்தையில் உறைவாய் உனக்கு அடைக்கலம் 

உலகம்மை நாயகனே உமையொரு பாகனே உனக்கு அடைக்கலம் 

ஊழ்வினை அறுப்பவனே வல்வினை தீர்ப்பாய் உனக்கு அடைக்கலம் 

எந்நோய்க்கும் மருந்தானாய் இறைவா உனக்கு அடைக்கலம் 

ஏழை துயர் தீருமையா ஏகநாதா உனக்கு அடைக்கலம் 

ஐம்பூத நாயகனே ஐம்புலன்கள் அடக்குவாய் உனக்கு அடைக்கலம் 

சித்தனாகி பித்தனாகி அத்தனாகி நின்றாய் உனக்கு அடைக்கலம் 

மாலும் அயனும் முயன்றும் முடியா முடியே உனக்கு அடைக்கலம் 

மும்மலமெரித்து முன் வினை தீர்ப்பாய் உனக்கு அடைக்கலம் 

முப்புரமெரித்த முதல்வனே நின் இணையடி அடைக்கலம் 

நோய்க்கு விடுதியாமிவ் வுடலை சோதிமயமாக்குவாய் அடைக்கலம் 

அனைத்தையும் நொடிபொழுதில் ஆக்கி அழிக்க வல்லோய் அடைக்கலம்

ஆவியற்று நான் வீழுமுன்னம் எனை ஆண்டுகொள்வாய் அப்பனே 

              ஐயனே அரனே ஐயா அடைக்கலம் உனக்கே .
 
                                                             
                                                            - திருவடி முத்துகிருஷ்ணன் 

                                         சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக