திங்கள், ஜூன் 16, 2014

அடியேனிடமிருந்து ....................அன்பர்களுக்கு 

                                              சிவமயம் 






 குருவே துணை      பட்டினத்தாரே சரணம்     குருவே சரணம் 




                     இந்த இணையத்தின் இணைப்பில் இருக்கும் மதிப்பிற்குரிய அடியார்களுக்கு அடியேன் திருவடி முத்துகிருஷ்ணனின் பணிவான வணக்கங்கள் .


             எம் குருநாதர் ஐயா திரு பட்டினத்தார் அவர்களை குருவாக நினைத்து  என் தியான வாழ்க்கையை ஆரம்பித்தேன் . அவருடைய திருவருளால் அடியேன் பல சிவ தலங்களுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறேன் . அப்படி அடியேன் சென்ற தலங்களை பற்றி பல பாடல்களை எழுதியுள்ளேன் . இத்தனை நாள் அதை பதிவிட மனமில்லாமல் இருந்தேன் நண்பர்கள் பதிவிட சொன்ன காரணத்தினால் பாடல்களை பதிவு செய்ய விருக்கிறேன் . அடியேன் படிப்பறிவு இல்லாத காரத்தினால், தமிழறிவு மிக்க பெரியவர்கள் அதிலேதும் பிழைகள் இருந்தால் அடியேனை மன்னிக்கும் படி வேண்டுகிறேன் .


           இந்த பாடல்கள் முழுக்க முழுக்க தியானத்தில் இருக்கும் போது எழுதினேன் . என் வாழ்வில் கடந்து வந்த சங்கடங்கள் பல அதன் தாக்கமும் இதில் அடங்கி இருக்கும் . 200 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளேன் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன் .தினசரி 3 பாடல்களாக பதிவு செய்கிறேன் .


                    பட்டினத்தார் திருவடிகளை போற்றி நாளை முதல் பதிவு செய்கிறேன் .

                                        நன்றி வணக்கம் .


                    என்றும் இறை பணியில்

                                                               திருவடி முத்துகிருஷ்ணன்

             
                                                சிவமேஜெயம் !!

 சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக