புதன், ஜூன் 18, 2014

   அடியேன் எழுதிய பாடல்கள் .. 


குருவே சரணம்       பட்டினத்தாரே சரணம்       குருவே துணை 

  
              
                                                                 சிவமயம்




ஊழ்வினையும் உறுத்தி உறுத்தி நம்மைச் 
சூழ்வினையே பெண்ணுருக் கொண்டு மாயையில் 
வீழ்செய்து புண்ணாங்குழி எனும்நரக வாயில்தள்ளி 
பாழ்செய்யும் இப்பிறவிப் பிணிபோக்குவாய் ஈசனே   


ஈசனே பிறந்திறந் துழலும் பிறவியின் 
நாசனே மீண்டும் பிறவா நிலையருளும் 
நேசனே பிறந்தால் உனைமறவா வரமருள்வாய் 
தேசனே நின்பதம் பற்றினேன் எனைக் காத்தருள்வாயே .


மெய்யை மெய்யென் றெண்ணி யிறுமாந்திருந்து
நெய்யிட்டு சோறெடுத்து மெய்வளர்த்து - இது 
பொய்யாய் போகுமென் றுணர்ந்து மெய்யோடு 
உய்வடையும் பேறெனக் கருள்வாய் வினைதீர்த்தவனே 

                                     
                                                -   திருவடி முத்துகிருஷ்ணன் 

                                      என்றும் இறை பணியில் 

                                     சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக