வியாழன், ஜூன் 02, 2011

கம்பளி சட்டை முனி ஞானம்



காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய் 
   கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசைசெய்வார் 
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப் 
புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும் 
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார் 
நம்முடைய பூசையென்ன மேருப்போலே 
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே 
உத்தமனே பூசைசெய்வார் சித்தர் தானே .

தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார் 
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும் 
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும் 
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர் 
வாய்திறந்தே உபதேசம் சொன்னாராகிற் 
கோனென்ற வாதசித்தி கவனசித்தி 
கொள்ளையிட்டான் அவன்சீடன் கூறினானே

கூறியதோர் வாலையின்மூன் றெலுத்தைக் கேளாய் 
குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய் 
மாறியதோர் திரிபுரையெட் டெலுத்தைக் கேளாய் 
மைந்தனே இவளை நீ பூசை பண்ணத் 
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய் 
திறமாகப் புவனையை நீ பூசை பண்ணு 
ஆறியதோர் யாமளையோ றெலுத்தைக் கேளாய்
அவளுடைய பதம் போற்றிப் பூசை பண்ணே

பண்ணியபின் யாமளையைந்த் தெழுத்தைக் கேளாய் 
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு 
வண்ணியதோர் வாசியென்ற யோகத்துக்கு 
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும் 
கண்ணியதோர் இத்தனையும் அறிந்திருந்தாற்
காயசித்தி விக்கினங்கள் இல்லையில்லை 
உண்ணியதோர் உலகமென்ன சித்தரென்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் கானே  


கம்பளி சட்டை முனி ஞானம் - முற்றிற்று 

இவரைப் பற்றி போகர் தன்னுடைய போகர் ஏழாயிரம் என்ற நூலில் 

பாலனாம் சிங்கள தேவதாசி 
பாசமுடன் பயின்றெடுத்த புத்திரன்தான் 
சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி 
சிறப்புடனே குவலயத்தில் பேருண்டாச்சு

   இவ்வாறு குறிப்பிடுகிறார் 

தொகுப்பு திருவடி முத்துகிருஷ்ணன் 






1 கருத்து:

  1. naan sattaimuniyin mun nanam pinnanam enra thalaipil aaiu seikirean atharkan puththakam matrum vilakka urai enaku kidaikavillai atharkana thakavalai kuuramudiuma

    பதிலளிநீக்கு