வியாழன், பிப்ரவரி 09, 2023

 அம்பாள் வாலையரசி  பூசை .....


வாலையைப் பூசிக்க சித்தரானார் 

வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார் 

வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார் 

இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே !

                        -கொங்கணச்சித்தர் வாலைக்கும்மி .

    

                  அண்டமத்தனையும் இயக்கும் சக்தி வாலையே , எல்லா உயிர்க்கும் புவனம் அனைத்திற்கும் இயக்கத்திற்கு காரணமாய் இருப்பவளும் அவளே அன்பிலே குழந்தை வடிவாய் ஆற்றலிலே மனோன்மணியாய் அனைத்துயிர்கட்கும் அருள்பவள் என் அன்னை வாலையே .

     ஆதிசக்தியின் குழந்தை வடிவமே வாலை இவளை பூசிக்காமல் சித்தி என்பது சத்தியமாய் சாத்தியமில்லை . பத்து வயது சிறுமியாய் இவளை பூஜித்து பூசையை ஆரம்பித்து படிப்படியாக சித்தி பெற்று பின் அன்னை மனோன்மணி தெய்வமாக பூசை முடித்து அவள் அருளாலே அப்பன் அருள் பெற்று மெய்யான நிலையை அடைந்தார்கள் சித்தர் பெருமக்கள் .


                 வாலையே அனைத்திற்கும் ஆதாரமாய் இருக்கும் ஆதிசக்தி அவளை அறிந்து அகப்பூசை செய்து சித்தி , முத்தி பெற்றவர்கள் சித்தர்கள் . வாலையை பூசிக்காத சித்தர் இல்லை . எல்லா சித்தர்களும் அவளை பூசித்து பாடல் பாடி பாடலிலே மறைபொருளாக அவளை வைத்து பாடியிருக்கிறார்கள் . நாமும் அன்னையை வணங்கி மாயையை வென்று அவளை நமக்குள் உணர்ந்து அவளின் அருளைப்பெறுவோம் . 

         இன்றைக்கிருப்பதும் பொய்யல்லவே - வீணே 
         நம் வாழ்க்கையென்பதும் பொய்யல்லவே 
         அன்றைக்கெழுத்தின் படி முடியும் - வாலை 
        ஆத்தாளைப் போற்றடி ஞானப்பெண்ணே !
                                             -  கொங்கணச்சித்தர் .

                       சிவமேஜெயம்   - திருவடி முத்துகிருஷ்ணன் 


         சிவத்தை போற்றுவோம் !!!     சித்தர்களை போற்றுவோம் !!!


 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக