திங்கள், ஆகஸ்ட் 04, 2014

திருமூலர் அருளிய 

                              திருமந்திரத்தில் இருந்து .......

                                





                                            
     சில மந்திரங்கள் 




தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறியார் அவர் தாமே .

பசுமையான மரத்தில் தழைக்கின்ற ,தளிர் , இலை , பூ இவை யாவும் மரத்திலிருந்து வீழ்ந்து அழிவதைக் கண்டும் . இம்மனிதர்கள் தவறு செய்யாது சிவபெருமான் திருவடிகளை தன சிந்தையில் ஏற்றாமல் காலன் வந்து அழைத்திடும் போது யாது செய்வதென அறியாது திகைத்து நிற்பார்கள் .

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞா னானந்தத் திருத்தலே .

கொலை செய்வதும் , பிறர் பொருளை அபகரிப்பதும் , காம வசப்பட்டு மூர்க்கராய் இருப்பதும் , பொய்கூறுவதும் இந்த கொடிய பாதகங்களை நம்மிடமிருந்து விலக்கி , மேலான பெரும் பேறை அடைவதற்குரிய ஈசனின் திருவடிகளை சார்ந்து இருப்போர் துன்பமில்லா பேரின்பம் அடையப் பெறுவார்கள் . அவ்வாறு பெற்றால் ஞானாந்தத்தில் இருந்து பிறப்பு இறப்பு என அனைத்தையும் நீங்கி சுகமாக இருப்பார்கள் .


                                     என்றும் இறை பணியில் 

                                                                   - திருவடி முத்துகிருஷ்ணன் 


                                     சிவமேஜெயம் !!

சிவத்தை போற்றுவோம் !!  சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக