வெள்ளி, ஜூன் 13, 2014



திருமூலர் அருள் செய்த
                          திருமந்திரத்திலிருந்து ...............










             
                           சில மந்திரங்கள் ..



கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத் தறியாரே .

சிவனை போற்றும் நூல்களை கல்லாத மனிதர்கள் தன்னிலை அறியும் அறிவை இழந்த மூடர்கள் ஆவர் . இவர்களைக் காணவும் அவர் கூறும் நன்மையில்லாத சொற்களை கேட்பதுவும் நம் கடமை இல்லை . இவர்களைப் போல் உள்ளவர்களே இவர்களுக்கு நல்லவராகத் தோன்றுவார் . நல்லவர் கூறும் நயமிக்க உயர்ந்த கருத்துக்களை செவி கொடுத்து கேட்கும் அறிவு அற்றவர்கள் ஆவார்கள் .

நடுவு நின்றார்க் கன்றி ஞானமு மில்லை
நடுவு நின்றார்க்கு நரகமு மில்லை
நடுவு நின்றார் நல்ல தேவருமாவர்
நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே .

தர்மத்தை போற்றி உயர்வையும் , தாழ்வையும் , இன்ப துன்பங்களையும் சமமாக பாவிக்கும் ஞானியர் மகான்களை தவிர பிற மனிதர்கட்கு ஞானம் வாய்ப்பதில்லை . அனைத்தையும் சமம் என கருதுபவர்கட்கு நரக வாழ்வுமில்லை,பிறந்து துன்பத்தை அனுபவிப்பதும் இல்லை . அவர்கள் மனித நிலையை கடந்து மேலான நிலையாம் தேவ நிலையை அடைவார்கள் . அவர்கள் நின்ற நிலையிலே அவர்களை பின்பற்றி நானும் இருக்கின்றேன் . 


                                        என்றும் இறைபணியில்

 
                                                         திருவடி முத்துகிருஷ்ணன் 

     
                                                       சிவமேஜெயம் !!

           சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்ற்வோம் !!




                           
     
                 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக