வியாழன், மே 28, 2015

சதுரகிரி மலை யாத்திரையின் ஆச்சர்யங்கள் ...


                    


                அடியேன் சதுரகிரியை ஆளும் என் அப்பனை பார்க்க பலமுறை சென்று வந்துள்ளேன் . அடியேன் சென்று வந்தேன் என்பதை விட அப்பன் என்னை அழைத்து தன் தரிசனம் கொடுத்தான் என்பதே நிதர்சனம் . ஏனெனில் நாம் நினைத்தால் அவனை காண முடியாது அவன் நினைத்தால் மாத்திரமே அது சாத்தியம் .

            ஒருமுறை மூன்று நண்பர்களுடன் அடியேன் அங்கு சென்று இருந்தேன்

வழக்கமாக சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தான் மலை ஏற ஆரம்பிப்போம் அன்று தூத்துக்குடியில் இருந்து கிளம்ப கால தாமதம் ஆகிவிட்டது. நாங்கள் நால்வரும் தாணிப்பாறை அடையும் போது இரவு 8 மணி நல்ல மழை பெய்து கொண்டிருந்தது . அங்கு இருந்த கடைக்காரரிடம் மேலே ஆட்கள் போகிறார்களா என்று கேட்டோம் அவர்கள் இல்லை மழை பெய்து கொண்டிருப்பதால் வெள்ளம் போகிறது நீங்கள் இங்கு தங்கி விட்டு காலையில் செல்லுங்கள் என்று சொன்னார்கள் . எனக்கு சிறிது கஷ்டமாக இருந்தது ஏன் என்றால் கண்டிப்பாக இரவு மேலே தங்கி விட்டு தான் வர வேண்டும் என்று நினைத்தோம் இப்படி ஆகிவிட்டதே .
           
            பரவாயில்லை ஈசனும்  எண்ணற்ற சித்தர்களும் வாழும் இந்த மலையில் பயப்பட என்ன இருக்கிறது என்று அவர்கள் பொறுப்பு  நடக்க ஆயத்தமானோம் . குருநாதர் பட்டினத்தாரை மனதில் நினைத்துக் கொண்டு சித்தர்களை வணங்கி மலை ஏற ஆரம்பித்தோம் . முதலில் வரும் பிள்ளையார் கோவிலில் கணேசனை வணங்கி பின் ராஜகாளியம்மன் கோவிலில் இருக்கிறோம் மழை விடுவதாயில்லை . அப்போது அங்கு  பைரவரின் வாகனங்கள் 8 இருந்தது . அடியேன் சிறு வயது முதலே நாயைக் கண்டால் மிகவும் பயம் , மழை பெய்து கொண்டிருக்கிறது இதுவும் துரத்த ஆரம்பித்தால் எங்கே ஓடுவது என்று கேட்டேன் என்னுடைய நண்பர் சொன்னார்  ஐயா அது ஒன்றும் செய்யாது என்றார் .

              அதே போல அதில் வெள்ளையாக இருந்த பைரவர் எங்கள் அருகில் வந்து நின்றார் கொஞ்சம் மன பயத்தை விலக்கி எப்படி மலை ஏறுவது என்று சிந்தனை சித்தர்கள் தான் எங்களை சிறப்பாக மலை மேல் சேர்க்க வேண்டும் என மனதில் தியானித்துக் கொண்டு இருக்கும் போது நிறைய டார்ச் வெளிச்சம் தெரிந்தது . நிறைய பேர்கள் வருகிறார்கள் என்று யூகித்துக் கொண்டோம் . 15 பேர் இருப்பார்கள் எங்களை பார்த்து கேட்டார்கள் நீங்கள் இங்கே தங்கலா மேலே வருகிறீர்களா என்று . நாயேனுக்கு மிகுந்த மகிழ்ச்சி எப்படியும் மேலே போய் விடுவோம் மனதில் தெம்பும் வந்தது . நாங்கள் நால்வரும் அவர்களோடு  நடக்க ஆரம்பித்தோம் எங்களிடம் அவர்கள் இயல்பாக பேசவில்லை ஆனால் அவர்களுக்கு மத்தியில் நாங்கள் நடந்து கொண்டு இருக்கிறோம் . முதல் நீரோடையை கடப்பதற்கு தயாரானோம் அதில் நீர்வரத்து அதிகமாக இருந்தது உள்ளே இறங்கினால் இழுத்துக் கொண்டு போகும் அளவிற்கு , காட்டாறு வெள்ளம் என்பதை அன்று தான் பார்க்கிறோம் . கொஞ்சம் பயம் என்று பொய் சொல்ல அடியேன் விரும்பவில்லை . 


                 மிகுந்த பயம் ஆனால் வெளிக்காட்டாது இருந்தேன் எல்லாம் ஈசன் செயல் என்று அப்போது அந்த கூட்டத்தில் இருந்த பெரியவர் எல்லோரும் கைகளை இருக்க பற்றிக்கொண்டு மொத்தமாக நடப்போம் என்று கூறி அதை கடந்து வந்து எங்களை கரை சேர்த்தார் என்னால் நம்ப முடியவில்லை என்ன நடந்தது என்று எல்லாம் ஈசன் செயல் என்று இப்போது தைரியமாக நடக்க ஆரம்பித்தோம் . அடுத்த நீரோடை அதிலும் மிகவும் பாதுகாப்பாக எங்களை கூடி வந்தார்கள் . பின் சங்கிலிப் பாறை சங்கிலிக்கு மேலே நீர் ஓடிக் கொண்டிருந்தது அங்கு போனவர்களுக்கு தெரியும் அந்த சங்கிலி எவ்வளவு உயரத்தில் பிணைக்க பட்டிருக்கும் என்று . ஒருவர் பின் ஒருவராக மறு முனைக்கு சென்றோம் . இப்போது அவர்கள் எங்களை நோக்கி பார்த்து மேலே போங்கள் என்றார்கள் . நாங்கள் அவர்களிடம் நீங்கள் மேலே வரவில்லையா ஐயா என்றோம் அவர்கள் இல்லை நாங்க இங்கே தங்கல் விடிந்த பின் வருகிறோம் என்று கூறினார்கள் . எங்களுக்கு மிகுந்த ஆச்சர்யம் , எல்லாம் அப்பனின் செயல் என்று குருநாதர் பட்டினத்தாரையும் , சித்தர்களையும் மனதில் நினைத்துக் கொண்டே மலை ஏறினோம் .   

                     
               எனக்கு இருந்தாலும் சிறிது பயம் இருந்தது அதைப் போக்கும் விதமாக இப்போது எங்கள் முன்னே நாங்கள் கோவிலில் பார்த்த அந்த வெள்ளை பைரவர் நின்று கொண்டிருந்தார் எங்கள் ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை . அவர் முன்னே நடக்க நாங்கள் அவரை பின் தொடர்ந்து சென்றோம் . இரட்டை லிங்கத்தை தரிசனம் செய்து அங்கே 30 நிமிடங்கள் தேவாரப் பாடல்கள் என்னுடைய நண்பர் பாடினார் . அந்த 30 நிமிடங்களும் அந்த பைரவர் எங்களுக்காக காத்திருந்து நாங்கள் நடக்க ஆரம்பிக்கையில் எங்களுக்கு முன்னே நடக்க ஆரம்பித்தார் மேலே மலையை சென்று அடைந்ததும் பைரவரை  பார்த்தோம் அவர் எங்களை பார்த்து விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தார் நாங்கள் மலையை சென்று அடையும் போது இரவு 11.30 மணி . வழக்கமாக நாங்கள் மலை ஏறுவதற்கு 1.30 - 1.45 நிமிடங்கள் தான் ஆகும் . ஆனால் இன்று ஈசன் எங்களுக்காக நிறைய அனுபவங்களை தந்து எங்களை காத்து அருள் செய்தான் என் அப்பனின்  கருணையை என்னவென்று சொல்வது . சுந்தர மகாலிங்கத்திற்கு நன்றியை சொல்லிவிட்டு மலையில் தங்கி அவனை கண்குளிர தரிசனம் செய்து விட்டு அந்த அனுபவத்தை மனதில் நினைத்தபடி மறு நாள் காலையில் இறங்கினோம் . 



                     இன்னும் அனுபவங்கள் தொடரும் ........

                  சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

  சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

                             
                                   





திங்கள், மே 25, 2015

திருநாளைப் போவார் என்னும் நந்தனார் வரலாறு 





                      சோழ வள நாட்டில் உள்ள ஆதனூரில் பிறந்தவர் திருநாளைப் போவார் என்னும் நந்தனார் . தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவராக இருந்தாலும் மெய்யான சிவபதத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தார் . பண்ணையில் கூலி வேலை மற்றும் கோயில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது. யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது என வேலை செய்து அதில் வரும் வருமாத்தில் சிவாலய பணிக்கு செலவுகள் செய்தார் இருந்தாலும் நந்தனாருக்கு பெரிய மனவருத்தம் இருந்தது . தான் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்ததால் ஈசனை கோவிலுக்குள் சென்று தரிசிக்க முடியவில்லையே என்பது அது. அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்தார்கள். அதனால் கோவில் வாசலில் நின்றபடிதான் சிவபெருமானை மனதால் வணங்கி வருவார். எப்படியாவது ஆலயத்திற்குள் சென்று தரிசிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வேண்டி வந்தார். 
                   
                            சிவபெருமானை கோயிலுக்குள் சென்று தரிசிக்க வேண்டும் என்று சொல்லும் போதெல்லாம், அதெல்லாம் புண்ணியம் செய்தவர்களுக்கு தான் கிடைக்கும். நமக்கு அந்த பாக்கியம் இல்லை. நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும் என்பார்கள். நீ தேவையில்லாத நினைப்பினால் பிழைப்பை கெடுத்துக்கொள்ளதே.” என்று நந்தனாரின் சமுதாயத்தினரே சொன்னார்கள்.நந்தனார் எந்நேரமும் சிவ சிந்தனையிலே இருந்து அவர்களின் குல வழக்கத்தை சாடியதால் சில பொறாமைக்காரர்கள் நந்தனாரை பற்றி தவறாக அவரின் முதலாளியிடம் கூறி வந்தார்கள் . அதை கேட்டு முதலாளியும் நந்தனாரை கண்டித்தார் .இப்படி இருக்கின்ற போது தில்லை நாதனை தரிசிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்குள் எழுந்தது . 

                    தனது முதலாளியிடம் தனது ஆசையை கூறி விடுப்பும் , பண உதவியும் செய்யுமாறு கேட்டார். உன்னால் அந்த ஊருக்குள் கூட செல்ல முடியாது பிறகு எவ்வாறு சுவாமியை தரிசனம் செய்வாய் என்று அவரை உதாசீனப்படுத்தி விட்டு , சரி இந்த வேலையை முடித்து விட்டு போ என்பார் நந்தனாரும் நாளை கண்டிப்பாக செல்வேன் என்று அனைவரிடமும் கூறி ஆனந்தம் கொள்வார் முதலாளியும் தினமும் இதைப் போல எதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருந்தார் . நந்தனாரும் தினமும் நாளைப் போவேன் என்கிற வார்த்தையையே சொல்லிக் கொண்டு இருந்தார் .
                       இப்படி இருக்கும் பொது திருப்புன்கூர் சென்று இறைவனை தரித்து விட்டு வரலாம் என்று திருப்புன்கூர் சென்றார் . அங்கு வெளியே நின்று சுவாமியை தரிசிக்க முடியாமல் நந்தி மறித்துக் கொண்டு இருந்தது கண் கலங்கி அப்பனிடம் முறையீடு செய்தார்.  தன்னை நாடி வந்த தம் குழந்தையின் கண்ணீரைக் கண்டபின் அப்பன் சும்மா இருப்பானா , உடனே நந்தியை விலகுமாறு ஆணையிட்டார் . நந்தி விலகியது ஈசனை கண்ணாரக் கண்டு ஆனந்தித்தார் . அதைக் கண்ட பக்தர்களும் இவருடன் வந்தவர்களும் இவரின் பக்தியைக் கண்டும் ஈசனின் கருணையைக் கண்டும் திகைத்து நின்றார்கள் . இன்றளவும் நந்தி அங்கே விலகி தான் நிற்கிறது .   

                          சிதம்பரம் போக வேண்டும் என்கிற இவரின் தாகம் அதிகம் ஆகியது அப்பனை தரிசிக்காமல் அன்ன ஆகாரம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தார் . தனது முதலாளியிடம் ஐயா அடியேன் சிதம்பரம் போக வேண்டும் என்று கேட்டார் , அவரும் நந்தனார் இப்படியே தினமும் கேட்பது நாம் ஒரு வேலை கொடுப்பதே வாடிக்கை ஆகிவிட்டது இந்த முறை நீ போகலாம் நந்தா என்றார் மகிழ்ச்சி பெரும் கடலில் தத்தளித்தார் நந்தனார் ஆனால் அந்த சந்தோசம் முதலாளியின் அடுத்த வார்த்தையில் காணாமல் போனது . தன்னுடைய நாற்பது ஏக்கர் நிலத்தையும் பண்படுத்தி பயிர் செய்து அறுவடையை முடித்து விட்டு தாரளாமாக போ நானும் உதவி செய்கிறேன் என்றார் . இதைக் கேட்ட நந்தனார் மிகவும் மனம் நொந்தார் அப்பனே இது என்ன சோதனை உன்னை அடியேன் காணவே முடியாத என்று கதறினார் . 

             அந்த நிலத்தை பார்த்தார் இதை எப்போது உழுது பயிர் செய்து அறுவடை முடிப்பது என்று நிலத்திலே மயங்கி விழுந்தார் . அந்த நேரத்தில் தான் தில்லையாடும் பெம்மான் ஒரு அற்புதம் நிகழ்த்தினார் பயிரெல்லாம் விளைந்து அறுவடை முடிந்து இருந்தது இதைக் கண்விழித்துப் பார்த்த நந்தனார் பேரானந்தம் கொண்டார் இந்த செய்தி ஊர் முழுவதும் தெரிந்தது . முதலாளியும் கேள்விப் பட்டு ஓடி வந்து பார்த்தார் ஈசன் மேல் நந்தனாருக்கு உள்ள பக்தியைக் கண்டு நந்தனாரிடம் மன்னிப்பு கேட்டு உடனே சிதம்பரம் செல்க என்று கேட்டுக் கொண்டார் . தான் தில்லை அப்பனை தரிசிக்க போகிறோம் என்று ஆனந்தத்தில் சிதம்பரம் சென்றார் . ஆனால் தம் பிறப்பை எண்ணி வருந்தி சிதம்பரத்திற்கு வெளியே நின்றார் , பசுவை தேடி வந்த கன்று போல ஓடி வந்து வெளியே நிற்கும் தம் பக்தனைக் கண்டு ஈசனே தில்லை வாழ் அந்தணர்களின் கனவில் தோன்றி நம் பக்தன் திருநாளைப் போவார் என்னும் நந்தன் தம் பிறப்பை எண்ணி வருந்தி வெளியே நிற்கிறான் அவனை பூரண கும்ப மரியாதையோடு என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார் . மறுநாள் அனைவரும் திரண்டு பூரண கும்பத்தோடு நந்தனாரை கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் போது ஒரு அந்தணர் எதிர்ப்பு தெரிவித்தார் .

         

















               கனவில் ஈசன் சொன்னார் என்பதற்காக தாழ்ந்த குலத்தவரை கோவிலுக்குள் அனுமதிப்பதா , திருநாளைப் போவார் என்று இறைவனே அழைத்ததாக நீங்கள் சொல்லும் இவர் அக்னியில் இறங்கி திரும்ப வரட்டும் அப்புறம் பார்க்கலாம் . இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானர் , ஆனால் நந்தனார் மட்டும் எந்த பதட்டமும் இல்லாமல் எனக்காக எவ்வளவோ அற்புதங்கள் நிகழ்த்திய என் அப்பன் இதையும் செய்வார் . நீங்கள் தீ மூட்டுங்கள் என்றார் திருநாளை போவார். தீ மூட்டப் பட்டது அருகில் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு அனலாய் எரிந்தது . இதையெல்லாம் பற்றி துளியும் கவலை இல்லாதவர் நந்தனார் ஈசனை நினைந்து அவன் நாமத்தை சொல்லிக் கொண்டே நெருப்பினுள் இறங்கினார் . பல அற்புதங்கள் நிகழ்த்தி நந்தனாரை இங்கு வரவழைத்த ஈசன் நந்தானாரின் பெருமைகளை உலகமே அறியும் படி பெரும் அதிசயம் நடத்தினார் நெருப்புக்குள் இறங்கிய நந்தனாரின் மேனியில் சிறு காயங்களின்றி பட்டாடையுடன் தெய்வீக தோற்றத்துடன் வெளியே வந்தார் இதைக்கண்டவுடன் அங்கு இருந்தவர் எல்லோரும் வாயடைத்து நின்றனர் . 
                          எத்தனையோ கஷ்டங்கள் பட்ட தம் பக்தனை , குழந்தையை இனியும் தன்னால் பிரிந்திருக்கலாகாது என்று எண்ணம் கொண்ட தில்லைக் கூத்தன் தன்னோடு நந்தனாரை கலக்க திருவருள் செய்தார் . கூடி இருந்தவர்கள் எல்லாம் மெய்சிலிர்த்து நின்றனர் . 
                   ஈசனை அடைய சாதியும் சமயமும் அவசியம் இல்லை அவர் மேல் தூய்மையான அன்பு இருந்தால் போதும் நாமும் அவனை அடையலாம் என்பதை நமக்கு உணர்த்தும் இந்த நந்தனார் சரித்திரம் . 


       திருநாளைப் போவார் என்னும் நந்தனார்க்கு அடியேன் 


                     சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 

  
    சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் 
       

வெள்ளி, மே 22, 2015

சிவத் தலங்கள் பற்றி தெரிய வேண்டிய தகவல்கள்




சப்த விடங்கத் தலங்கள்

1. திருவாரூர்     வீதிவிடங்கர்    அசபா நடனம்
2.திருநள்ளாறு    நக விடங்கர்   உன்மத்த நடனம்
3. திருநாகைக் காரோணம்   சுந்தர விடங்கர்  பாராவார தரங்க நடனம் 
4. திருக்காரவாசல்  ஆதி விடங்கர்   குக்குட நடனம்
5. திருக்கோளிலி   அவனி விடங்கர்  பிருங்க நடனம்
6. திருவாய்மூர்   நீல விடங்கர்  கமல நடனம்
7. திருமறைக்காடு  புவனி விடங்கர் ஹஸ்தபாத நடனம்

     

காசிக்கு சமமாக சொல்லப்படும் சிவாலயங்கள்

1.திருவெண்காடு
2.திருவிடைமருதூர்
3.திருவாஞ்சியம்
4.மயிலாடுதுறை
5.திருச்சாய்க்காடு
6.திருவையாறு


தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்

அப்பர் பெருமானால் பாடப் பெற்றது                28
திருஞான சம்பந்த பெருமான்   பாடியது         110
சுந்தரமூர்த்தி பெருமான் பாடியது                    25
அப்பராலும் , சுந்தரராலும் பாடப் பெற்றது         2  
அப்பரும் , சம்பந்தரும் பாடியது                       52
சம்பந்தரும் , சுந்தரரும் பாடியது                      13
மூவராலும் பாடப் பெற்றது                              44

        ஆக மொத்தம் 274 தேவாரம் போற்றும் தலங்கள்




பஞ்ச பூத தலங்கள்

1. திருவாரூர் . திருக்காஞ்சிபுரம்        - நிலம்
2.திருவண்ணாமலை                         - நெருப்பு 
3. திருவானைக்கா                             - நீர்
3. சிதம்பரம்                                       - ஆகாயம்
4.திருக்காளத்தி                                  - காற்று



பஞ்ச சபைகள்

1.திருவாலங்காடு           -  இரத்தின சபை
2.சிதம்பரம்                     - கனக சபை
3.மதுரை                        - ரஜித சபை
4.திருநெல்வேலி            - தாமிர சபை
5.திருக்குற்றாலம்           - சித்திர சபை


முக்தி அளிக்கும் சிவத் தலங்கள்

1.திருவாரூர்                     - பிறக்க முக்தி
2.திருவண்ணாமலை        - நினைத்தாலே முக்தி
3.சிதம்பரம்                       - தரிசிக்க முக்தி
4.காசி                               -  இறக்க முக்தி


 அட்ட வீரட்டானத் தலங்கள் 

1 . திருக்கண்டியூர்      - பிரம்மன் சிரம் கொய்தது 
2 . திருக்கோவலூர்     - அந்தகாசுர வதம் 
3 . திருவதிகை           - திரிபுரம் எரித்தது 
4 . திருப்பறியலூர்      - தக்கன் வேள்வி தகர்த்தது 
5 .  திருவிற்குடி         - சலந்திரனை அழித்தது 
6 . திருவழுவூர்          - யானையின் தோலை  உரித்து போர்த்தியது 
7 . திருக்குறுக்கை      - காமனை தகித்தது  
8 . திருக்கடவூர்          - காலனை உதைத்தது 

ஆகிய இந்த எட்டுத் தலங்களும் ஈசனின் வீர செயல்களை பறை சாற்றும் அட்ட வீரட்டானத் தலங்களாகும் .

                   
            சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


  சிவத்தை போற்றுவோம்  !! சித்தர்களை போற்றுவோம் !!