திங்கள், ஜூன் 30, 2014

அடியேன் எழுதிய பாடல்கள் ...

                                           சிவமயம் 
                                      சிவமேஜெயம் 

குருவே சரணம்        பட்டினத்தாரே சரணம்         குருவே துணை 







ஆதிசித்த நாதனை அநாதியான மூலனை 
ஆதியந்த மில்லாஎங்கள் ஆலமுண்ட கண்டனை 
மாதிலொரு பாதியனை மாயை அறுக்கும் ஈசனை 
சோதிரூப மானவனை எப்போதும் சிந்தித்திரு நெஞ்சே  .


நல்லாரைக் கூடிநயம்பட வாழாமல் தீங்கு செய்யும் 
பொல்லாரைக் கூடி பொழுதினை கழித்து பாரமாய் வாழுமிப் 
பொல்லாப் புலையனும் நாயினுங்கீழ் பிறப்பெடுத்தயென் 
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கயிலை நாதனே  .


போதும் பிறந்திறந்து அல்லல்படும் வாழ்வு இனியொரு 
போதும் பிறக்க இசைவியோ மட நெஞ்சே பிறந்தால் எப் 
போதும் ஆனந்தக் கூத்தனை சிந்தையில் நினைந்திரு அப் 
போதுபிற வாநிலையடைந்து பேரின்பத்தில் திளைத்திருப்பாய் . 


                                    
                                      - திருவடி முத்துகிருஷ்ணன் 


                                          சிவமேஜெயம் !! 

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக