சனி, ஏப்ரல் 30, 2016

தேவார பாடல்கள் ..

 வாழ்க்கையில் கஷ்டம் தீர ..


       

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏச லில்லையே.


இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.


செய்ய மேனியீர் மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர் உய்ய நல்குமே.


நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறு மருளுமே.


காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.


பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே.


மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் 
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.


அரக்க னெரிதர இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே.


அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனு மருளுமே.


பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே.


காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே.



                                        கஷ்டம் தீர பெருமானிடம் பொருள் கேட்கும் பதிகம் . மெய்யன்பினால் ஈசனிடம் சம்பந்தபெருமான் படிக்காசு கேட்க சிவபெருமான் கொடுத்தருளினார் . அதுபோல நம்முடைய கஷ்டத்தையும் நீக்கும் பொருட்டு நம் அப்பனிடம்  இப்பதிகத்தை பக்தியோடு பாடி கஷ்டம் தீர்க்க அருள்புரிய வேண்டுவோம் . 



                           சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 



சிவத்தை போற்றுவோம் !! சித்திகளை போற்றுவோம் !!



                              















 
தேவார பாடல்கள் ...

 தினம் ஒரு பாடல் .



                         தம் தந்தைக்காக  எம்பெருமானிடம் பொருள் அருளுமாறு திருஞானசம்பந்த பெருமான் அருளிச் செய்த திருப்பதிகம் . 




1.  இடரினும் தளரினும் எனதுறுநோய் 
     தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் 
     கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை 
     மிடறினில் அடக்கிய வேதியனே 
     இதுவோயெமை ஆளுமாறீவதொன் றெமக்கில்லையேல்  
     அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே .


         தேவர்கள் அமுதம் பெரும் பொருட்டு பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகாலம் என்னும் கொடும் விஷத்தை தனது கழுத்தில் அடக்கி உலகத்தை காத்த வேதநாயகனே ! அடியேனுக்கு எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் , இளமை நீங்கி முதுமை அடைந்து தளர்ந்து போனாலும் தீவினையால் தீராத நோய் ஏற்பட்டாலும் உன் திருவடிகளை மறவாது வணங்குவேன் . அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுதானோ ? எம் தந்தைக்கு தேவைப்படும் பொருளை நீ தராது போனால் உன் திருவருளுக்கு அழகோ ஆவடுதுறை ஆளும் பெருமானே . 


                                  சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 



சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!









வெள்ளி, ஏப்ரல் 29, 2016

சித்தர்களை நேரில் காண முடியுமா ?





   காணலாம் என்றும் , அவர்களை தரிசனம் செய்யும் மார்க்கத்தையும் அழகாக அகத்திய பெருமான் தனது " அகத்திய பூரண சூத்திரம் " என்கிற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார் .

அகத்திய பூரண சூத்திரம்

அதிகமாய் சித்தர்களைநீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கிலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு

                                                              - அகத்தியர்


சித்தர்களை தரிசிப்பதற்கு தியானம் ஒன்று சொல்கிறேன் கேள் எனத் 

துவங்குகிறார் அகத்தியர்....

"ஓம் கிலீம் சிவாய நம" என்று நிதமும் செபித்து தியானம் செய்து வந்தால் 

சித்தர்களைக் காணலாம் என்றும் அப்படி அவர்கள் தோன்றும் பொது
பரிகசிக்கத்தக்க உருவத்தில் தோன்றுவார்கள் என்றும் அப்படி அவர்களை 
கண்டதும் தலையை அவர்கள் பாதத்தில் படும்படி வைத்து வணங்க 
வேண்டும் என்று கூறுகிறார்.


                              சிவமேஜெயம்  - திருவடி முத்துகிருஷ்ணன் 
                   


சிவத்தை போற்றுவோம் !!     சித்தர்களை போற்றுவோம் !!