வெள்ளி, நவம்பர் 15, 2013

                                                 சிவமேஜெயம் 

        குருவே சரணம்    பட்டினத்தாரே சரணம்  குருவே துணை 



காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் தனித்துச் செத்துப்
போம்பிணந் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டு இனிமேற்
சாம்பிணங் கத்துது ஐயோ! என் செய்வேன் தில்லைச் சங்கரனே!


முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு 
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம்உய்ய வேண்டுமென்றே அறி வாரில்லையே!



பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடைசுற்றி,
முத்தும் பவளமும் பூண்டுஓடி ஆடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கென்ன? காண் கயிலாபுரிக் காளத்தியே!


                                                                                                             ஞான குரு ஐயா 
                                                                                                                    பட்டிணத்தார் 

இறை பணியில் 
                                       திருவடி முத்துகிருஷ்ணன் 

                                               சிவமேஜெயம் !!!

சிவத்தை போற்றுவோம்  !!! சிததர்களை போற்றுவோம் !!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக