செவ்வாய், நவம்பர் 26, 2013


        சித்தர் பாடல்களில் இருந்து ................




                 


ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல்
எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே.


இறைவனிடத்து உண்மையான அன்பும் , பக்தியும் இல்லாதவர்கள் நாடோடியாய் எட்டு திசைகளில் அலைந்து திரிந்தாலும் . நாட்டில் நிறைய கோவில்கள் கட்டி  , சிறப்பாக பூசை செய்தாலும் , அவர்கள் பக்தி என்பது ஏட்டு சுரைக்காய் போன்றது அது கறிக்கு உபயோகபடாது . இவர்கள் யாவரும் மெய்யான சிவ பதத்தை அடைய மாட்டார்கள் என்று ஆடுவாய் பாம்பே என்று கூறுகிறார்  

தன்னையறிந் தொழுகுவார் தன்னை மறைப்பார்
தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்
பின்னையொரு கடவுளைப் பேண நினையார்
பேரொளியைப் பேணுவாரென் றாடாய் பாம்பே.


தான் யாரென்று உணர்ந்தவர் நான் என்ற அகந்தை விடுத்து உலக வாழ்வில் தன்னை மறைத்து வாழ்வார் .தன்னை உணராதவர் இவ்வுலகில் தான்மட்டுமே உயர்ந்தவர் என்ற  அகந்தையைக்  காட்டுவர்.குறிப்பிட்ட கடவுளை வணங்கிப் பேண  நினையாதவர்கள்  அருவமும் உருவமும் இல்லாத அநாதியான அருட்பெருஞ் சோதியைப் பேணுவர் என்று ஆடுவாய் பாம்பே என்று பாடியுள்ளார் .


                                                              இறை பணியில் 
                               
                                                                                                           பெ.கோமதி 

                                                                         சிவமேஜெயம் !!

                       சிவத்தை போற்றுவோம் !!     சித்தர்களை போற்றுவோம் !!

                                  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக