வெள்ளி, டிசம்பர் 27, 2013



திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .


மணிவாசகப் பெருமான் அருளிய 

   திருவாசகத்திலிருந்து 



பாடல் -12
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீத்தன் நல் தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்துமட கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
புாத்திகழும் பொய்கை குடைந்ஐடயான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

நம்மைக்கட்டி இருக்கும் பிறவித் தளையில் இருந்து விடுவிக்கும் தூயகுணம் உடையவன் தில்லையில் உள்ள ஞானசபையில் கையில் அனல் ஏந்தி ஆடுபவன் வான உலகம் நில உலகம் என்று எல்லா உலகங்களிலும் உள்ள உயிரினங்களைப் படைத்துக் காத்துப் பின் மறைத்து அருள்கின்ற அனைத்தையும் திருவிளையாட்டாய்ச் செய்து முடிப்பவன் ,அப்பெருமானது புகழை வார்த்தைகளால் பேசி வளையல்களும் மேகலையும் ஒலிக்க அழகிய கூந்தலில் வண்டுகள் ஒலிக்க புாக்கள் நிறைந்த தடாகத்தில் குளித்து நம்மை ஏற்றுக்கொண்ட பெருமானது பொன்பொன்ற திருவடிகளை வணங்கித் துதிப்போமாக.

                                                                                   இறை பணியில் 

                                                                                         பெ.கோமதி 

                                                    சிவமேஜெயம் !!





        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக