வெள்ளி, ஏப்ரல் 29, 2016

சித்தர்களை நேரில் காண முடியுமா ?





   காணலாம் என்றும் , அவர்களை தரிசனம் செய்யும் மார்க்கத்தையும் அழகாக அகத்திய பெருமான் தனது " அகத்திய பூரண சூத்திரம் " என்கிற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார் .

அகத்திய பூரண சூத்திரம்

அதிகமாய் சித்தர்களைநீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கிலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு

                                                              - அகத்தியர்


சித்தர்களை தரிசிப்பதற்கு தியானம் ஒன்று சொல்கிறேன் கேள் எனத் 

துவங்குகிறார் அகத்தியர்....

"ஓம் கிலீம் சிவாய நம" என்று நிதமும் செபித்து தியானம் செய்து வந்தால் 

சித்தர்களைக் காணலாம் என்றும் அப்படி அவர்கள் தோன்றும் பொது
பரிகசிக்கத்தக்க உருவத்தில் தோன்றுவார்கள் என்றும் அப்படி அவர்களை 
கண்டதும் தலையை அவர்கள் பாதத்தில் படும்படி வைத்து வணங்க 
வேண்டும் என்று கூறுகிறார்.


                              சிவமேஜெயம்  - திருவடி முத்துகிருஷ்ணன் 
                   


சிவத்தை போற்றுவோம் !!     சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக