வியாழன், ஜூலை 30, 2015

                                                    சிவமயம் 

குருவே துணை                பட்டினத்தாரே சரணம்         குருவே சரணம்                             

பட்டினத்தார் பாடல்களும் விளக்கமும்

முதலாவது கோவில் திருவகவல் 

நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க 


மனமே சிவபெருமானை , பொன்னால் ஆகிய சபையின் கண் எழுந்தருள் செய்யும் சிவனை எந்நேரமும் சிந்தனை செய்வாயாக . பேய்த் தேரினையும் சுழலும் காற்றினையும் ஒத்த பொய்யாம் உலக வாழ்க்கையில் உழலும் உடலை பேணுவதை விடுத்து சிவபெருமானை எண்ணுவாயாக . 


பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;


இந்த உலகில் பிறந்தது எல்லாம் ஒரு நாள் இறக்கும் , இறந்தது மீண்டும் பிறக்கும் , தோன்றின மறையவும் மறைந்தன தோன்றவும் செய்யும் . பெரிதாய் இருப்பது ஓர் நாள் சிறுத்துப் போகும் , சிறியதாய் உள்ளது பெருத்துப் போகும் . அறிந்தது எல்லாம் மறந்து போகும் , மறந்தது மீண்டும் நினைவில் தோன்றும் . சேர்ந்தது ஒரு நாள் பிரிந்து போகும் பிரிந்தது மீண்டும் சேரும் இது நிதர்சனமாம் .


                       இன்னும் பாடல்கள் அடுத்த பதிவில் ......


              சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


              



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக