செவ்வாய், ஜூலை 07, 2015


சித்தர்கள் நோக்கில் .........

              கோபம் பற்றி சித்தர்கள் 

  கோபத்தை அழித்தால் யாவும் சித்திக்கும் என்று அழகான அடிகளில் இடைக்காட்டு சித்தர் நமக்கு கூறுகிறார் .

சினமென்னும் பாம்பிறந்தாற் தாண்டவக்கோனே யாவுஞ்,
சித்தியென்றே நினையேடா தாண்ட வக்கோனே.


கடுவெளி சித்தர் இன்னும் கொஞ்சம் தெளிவாக நல்லோர் நட்பு  கொண்டு பொல்லாத கோபத்தை கொல்ல  வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார் . 

வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு
.

              கோபமே அறிவுக்கு சத்ரு , கோபம் வெளிப்படும் போது விவேகம் மறைந்து மூர்க்கத்தனம் வருகிறது .  முடிவுகள் சரியாக இல்லாமல் நாம் தவறு செய்ய நேர்கிறது ஆகவே கோபம் அழிவுக்கு வழி வகுக்கும் . தியானம் செய்வதின் மூலம் மனம் அமைதி பெறும் . மனம் அமைதியின் மூலம் கோபம் கட்டுப்படும் . கோபத்தை தவிர்த்து எப்போதும் ஆனந்தத்தில் நிலைத்து இருப்போம் . சிவசிந்தனை ஒன்றே நம்மை எப்போதும் ஆனந்தத்தில் நிலைக்கச் செய்யும் . 


                                சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் 


        சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!


                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக