வியாழன், மார்ச் 12, 2015



மணிவாசக பெருமான் அருளிச் செய்த 

                  திருவாசகத்தில் இருந்து ..................





      
கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந்தேனெம் பிரானெனைத் தாங்கிக்கொள்ளே.


உந்தன் அளவு கடந்த கருணையினால் கடையேனை ஆண்டு கொண்ட விடையேறும் பெம்மானே , என்னை விட்டு விடுவாயோ வலிமை பொருந்திய புலியின் தோலை உரித்து உடையாய் அணிந்தவனே , நிலையான இன்பம் தரும் உத்தரகோசமங்கை நகரை ஆளும் தலைவனே சடைமுடியை உடையவனே , அடியேன் சோர்ந்து போனேன் என்னை நீ  தாங்கி கொள்வாயோ பெருமானே . 


               என்றும் இறை பணியில் 


                                 சிவமேஜெயம்  - திருவடி முத்து கிருஷ்ணன் 


        சிவத்தை போற்றுவோம் !!  சித்தர்களை போற்றுவோம் !!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக