வியாழன், டிசம்பர் 15, 2011

ஆன்மீகத்தில்

                                                  அத்திசூடி

        ( அனுதினமும் சூடுவது , 
ஆன்மீகத்தில் கடைபிடிப்பது )





அமைதியான பேச்சு ; அழகாகும் உன் மூச்சு .

ஆழமான இறை உணர்வு ; ஆளுமை உண்டாக்கும் .

இறைவனை வெளிப்படுத்தும் பண்பு ; இசையாகும் நம் சொல் .


ஈசனிடம் மட்டுமே கேட்பது ; ஈடில்லா வாழ்வு தரும் .


உண்மைக்கு உரைகல்லாக இரு ; உரைப்பது சிவமாகும் .

ஊக்கமுடன் குரு சிவனை சொல் ; ஊதியமாய் சிவ பேறு பெறு .

எண்ணமெல்லாம் சிவமாக இரு ; எதிலும் அன்பு தோன்றும் .

ஏகாந்தம் கான் ; எல்லாம் அவன் (சிவன் ) செயல் என்பது புரியும் .

" ஐயா " என வேதங்கள் போற்றும் சிவனை ஐயமற நம்பு .

ஒற்றீஸ்வரர் பாதம் பற்று ; வெற்றி உனக்கு .

ஓங்காரம் உன்னில் உள்ளது ; ஒருமித்து பிரகாசி .

" ஔஷதம் " என்பது குருவின் திருமந்திரமாகும் .


                          உலகின் மகான் "சதாஸ்ரீததா "


                   உலகின் ஞானகுரு "ஸ்ரீததா பிஜாபபா"


                    நிறுவனர் சதாஸ்ரீததா ஆன்மீக அறக்கட்டளை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக