செவ்வாய், நவம்பர் 15, 2011

பாரதியார் பாடல்கள்

      பராசக்தியிடம் காணி நிலம் 
வேண்டும் ........ பாரதியார் 


காணி நிலம் வேண்டும் - பராசக்தி 
காணி நிலம் வேண்டும் - அங்கு,
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித் தரவேணும் - அங்கு,
கேணி யருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்



பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்புவர வேணும் - அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற்பட வேணும் - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல்வர வேணும் .



பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா !நின்தன்
காவலுற வேணும் - என்தன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும் .



எவ்வளவு இனிமையான கவிதை மிக அழகாக தனது ஆவலை கூறி இருக்கிறார் காணி நிலமும் அது எவ்வாறு அமைய வேண்டும் என்றும் அதிலும் , இந்த நாடு நலம் பெற வேண்டும் . அவருக்கினை அவர்தான் .

                                                          திருவடி முத்துகிருஷ்ணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக