சனி, ஆகஸ்ட் 22, 2015



அடியேன் எழுதிய பாடல்கள் ....







நாய்செய் தநல்வினை யான்செய்ய விலையோபிறவி 
நோய்தீர்ப் பவனேசங்கர ராமேஸ்வரா நின்னாலயத்துள் அந் 
நாயுறங்க என்னதவம் செய்ததோ இந்நாய்மனம்  நோகுதையா ஆல 
வாயண்ணலே அடிநாய்க் கருள் செய்யே .



அருவானவ னெங்குநிறைந்து அருவுருவானவன் கற்ப 
தருவானவன் நிலையான இன்பந் தருவானவன் குருவுக்குங் 
குருவானவன் மெய்யன்பரழைக்க வுடன் வருவானவன் தானே 
உருவானவன் தன்னிகரில்லாத வனெங்கள் வாக்கீசனே .


                               சிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன் .


      சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக