பிண்ணாக்கீசர் என்னும் புண்ணாக்கு சித்தர்
தேவி மனோன்மணியாள் திருப்பாதம் காணவென்று
தாவிதிரந்தேளே - ஞானம்மா
சரணம் சரணம் என்றே
அஞ்ஞானமு கடந்து அறிவை மிகசெலுத்தி
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் - ஞானம்மா
விலையில்லா ரத்தினமடி
முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல்
சட்டையாம் தேகத்தினுள்ளே - ஞானம்மா
தானுயிரு நிற்பதடி
விட்டகுறை வாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல்
தொட்டகுறை ஆனதினால் - ஞானம்மா
தோன்று மெயஞ் ஞானமடி
தம்முள மறியாமல் சரத்தைத் தெரியாமல்
சம்சாரம் மெய்யென்று - ஞானம்மா
சாகரத்திலே உழல்வார்
இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா
சொன்னால் வருமோசம்
முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும் விட்டு - ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே
நினைவைக் கனவாக நீயெண்ணி ப்பார்க்கில்
சினமாய் வரும் எமனும் - ஞானம்மா
தெண்டனிட்டுப் போவானே
யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல்
மோகமெனும் குழியில் - ஞானம்மா
மூழ்கியே போவார்கள்
சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆத்திதேட நினைத்து - ஞானம்மா
அலைவார் வெகுகோடி
பூச்சும் வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கு இடந்தானே - ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி
கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
கணக்கைத் தெரியாமல் - ஞானம்மா
கலங்கி அழுதாரடி
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை என்னாமலல்லோ - ஞானம்மா
நலிந்தே அழுவாரடி
கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல்
தேவமாதா இரவல் - ஞானம்மா
தெரியாதே அலைவாரே
செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம்
உத்தமர் போலப் பேசி - ஞானம்மா
உலகில் திரிவாரடி
காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும்
காட்டில் குருவில்லாமல் - ஞானம்மா
கண்டறிதல் ஆகாதே
நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
இல்லாவெளிச்சமது - ஞானம்மா
ஈனவெளிச்ச்மடி
சம்சாரமென்றும் சாகரமாமென்றும்
இம்சையடைவோர்கள் - ஞானம்மா
இருந்து பயனா வதென்ன
காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
ஊத்தை சடலமிது - ஞானம்மா
உப்பில்லாப் பொய்க்கூடு
அஞ்சுபேர் கூடி அரசாளவே தேடி
சஞ்சாரம் செய்ய - ஞானம்மா
தானமைத்த பொய்க்கூடே
தொகுப்பு : திருவடி முத்துகிருஷ்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக